Sunday, December 30, 2012

பாலியல் பலாத்கார மரணம்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் கண்டனம்!

புதுடெல்லி:இந்தியாவின் தலைநகரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

இளம்பெண்ணின் மரணம் இந்திய பெண்களின் பாதுகாப்பைக் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. கொடூரமான இச்சம்பவத்தில் அரசுதான் முக்கிய பொறுப்பாளி. எல்லை மாநிலங்களிலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை காண்பதற்கு இச்சம்பவம் அதிகாரிகளுக்கு தூண்டுகோலாக அமையவேண்டும். அங்கேயெல்லாம் குற்றம் புரிவது போலீசும், ராணுவமும் என்பதால் நிலைமை கடுமையானது. இந்திய மக்கள் நீதி கேட்டு வீதிகளில் இறங்கி போராடுவது நல்ல அறிகுறியாகும்.

நீதிக்கான இந்த முழக்கம் உயர் ஜாதியினருக்கான விவகாரத்தில் மட்டுமாக ஒதுங்கிவிடக் கூடாது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை அளிப்பதற்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உணர்ச்சியின் பிரதிபலிப்பாகும். இது கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும். சட்டத்தின் குறைபாடு இல்லை. மாறாக, அதிகாரிகளின் பொறுப்புணர்வில் ஏற்பட்ட வீழ்ச்சியே இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற காரணமாகும். சட்டம் கடுமையாக்கும் பொழுது அவை துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

அனைத்து குற்றவாளிகளுக்கு பாடமாகும் விதமாக குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து பிரிவினருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் பாரபட்சமற்ற முறையில் செயல்படவேண்டும் என்று கே.எம்.ஷெரீஃப் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

எழுச்சியுடன் தொடங்கிய இமாம்களின் மாநாடு


சென்னை: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக இன்று காலை சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலி "இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு" எழுச்சியுடன் தொடங்கியது.
காலை 9 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழக தலைவர் இபுராஹிம் உஸ்மானி அவர்கள் கொடியேற்றி வைத்து இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுச்செயலாளர் ஆபிருதீன் மன்பஈ திறந்துவைத்தார். காலை 10 மணியளவில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஜமாத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் மெளலானா மன்சூர் காஷிஃபி அவர்கள் காதியானிகளின் உருவாக்கம் தொடர்பான உரையை நிகழ்த்தினார். அடையாள் ஜூம்மா மஸ்ஜிதின் தலைமை இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் இஸ்லாமிய கல்வி என்ற தலைப்பிலும் இன்னும் பிற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவாற்றினர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி, செயலாளர் சாகுல் ஹமீது பாகவி, பொருளாளர் முஹம்மது ஈஸா, ஐக்கிய சமாதானப்பேரவையின் தலைவர் ஹாமித் பக்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆலிம்கள் இதில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. முஸ்லிம் தனியார் சட்டம்:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 25ன் படி இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திர உரிமையை ( ) வழங்குகின்றது. அதனடிப்படையில் சிவில் விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தாரும் அவரவர் மதச்சட்டங்களை பின்பற்றிக் கொள்ளலாம். முஸ்லிம்கள் தங்களுடைய ஷரீஅத் சட்டமான "முஸ்லிம் தனியார் சட்டத்தை" பின்பற்றி வருகின்றனர். ஷரீஅத் சட்டத்தின் படி ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதற்கு பருவமடைந்துவிட்டால் போது; 18 வயது பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் மணப்பெண்ணின் திருமணத்தகுதி குறித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் சிறுமியர் திருமணத்தை தடுத்து நிறுத்துகிறோம் என்ற ஒரு மாயையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகத்தைச்சேர்ந்த அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகலும் முஸ்லிம்களின் திருமணத்தை தடுத்தி நிறுத்தி, மணப்பெண்ணை கைது செய்து சீர்திருத்த இல்லத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து வைக்கும் அவல நிலை சமீபகாலமாக தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. இது முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். முஸ்லிம் பெயர் தாங்கிளாக அரசுப் பணியாற்றிவரும் அதிகார மட்டத்தில் உள்ள சில கருப்பு ஆடுகளும் இதற்கு துணை போகின்றனர். ஷரீஅத் சட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு அதிகாரிகளே இது போன்று சட்டத்தை மீறி செயல்படுவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் தாந்தோன்றித்தனமான இந்த செயலை கட்டுப்படுத்துவதும், ஷரீஅத் சட்டத்தை மீறாத வகையில் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

2. கட்டாய திருமண பதிவுச்சட்டம்:

 முஸ்லிம் சமூகத்தின் திருமணங்களை முறையாக பதிவு செய்யும் நடைமுறை ஒவ்வொரு முஹல்லாவில் உள்ள பள்ளிவாசலிலும், ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே கட்டாய திருமண பதிவுச்சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கென்று தனியாக அரசு விதிவிலக்கு அளிக்க வேண்டும். முஹல்லா பதிவேட்டில் உள்ள பதிவுகளை திருமணம் குறித்தான சான்றாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


3. மத வழிபாட்டுத்தலங்கள் மற்ரும் வக்ஃபு சொத்துக்கள்:

தமிழகத்தில் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத்தலங்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவதும், அவற்றை சேதப்படுத்துவதும், அவற்றின் கண்ணியத்தை குழைக்கும் செயல்கள் சமூக விரோதிகளால் அரங்கேற்றப்பட்டு வருவது கவலைக்குறியது, கண்டிக்கத்தக்கது. மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், இரு சமூகங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தும்  வண்ணம் கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டு வரும் அத்தகைய‌ சமூக விரோதிகளை இனம் கண்டு, கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்ட நட்வடிக்கை எடுக்குமாறும், பொது அமைதியை சீர்கெடுக்கும் வண்ணம் செயல்பட்டு வரும் இவர்களின் சதிச்செயலை முறியடிக்கவும், சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.


4. வக்ஃபு சொத்துக்கள்:

வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் நாடெங்கிலும் ஆக்கிரமிக்கப்பட்டிருகின்றன.  அரசுகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது மாபெரும் அநீதியாகும். அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளிலும், சமூக பொருளாதார ரீதியிலும் முஸ்லிம் சமூகம் மிகவும் பின் தங்கியிருப்பதை சர்ச்சார் அறிக்கை  தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலையை முன்னேற்ற இடஒதுக்கீடும், பிரத்யோக நலத்திட்டங்களும் எப்படி முக்கியச் காரணிகளாக அமைகின்றதோ, அதே போன்று வக்ஃபு சொத்துக்கள் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் பயன்பாட்டிற்காக அமைத்துக்கொடுப்பதும் மற்றொரு காரணியாக விளங்கும். எனவே நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருக்கு வக்ஃபு சொத்துக்களை மீட்பதற்கு உரிய செயல்திட்டங்களை வகுத்து, இனியும் தாமதிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகலை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


5. திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் கலாச்சார சீர்கேடு:

மனித வாழ்வின் ஒழுக்க விழுமியங்களை தகர்க்கும் வண்ணம் வன்முறைக்காட்சிகளும், ஆபாசமும் திரைப்படங்களிலு நாளுக்கு நால் அதிகரித்து கொண்டே வருவது கலாச்சார சீர்கேட்டின் உச்ச கட்டத்திற்கு மனித சமூகத்தை அழைத்துச் செல்கின்றது. பெண்களை ஆபாசமாகவும், போகப்பொருளாகவும், திரைப்படங்கல் காட்டி வருவதால் நாட்டில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கற்பழிப்புக்களும் நாளுக்கு நால் அதிகரித்து கொண்டே வருவதை காண முடிகிறது. பெண்களை மதித்து போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வை மறக்கடித்து, பெண்களுக்கெதிரான வக்கிர குணத்தை இந்த ஆபாச காட்சிகள் ஆண்கள் மனதில் விதைக்கின்றன. இதுவே பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. போலிப் பெண்ணுரிமை பேசிவரும் பெண்ணியவாதிகளின் குருட்டுப் பிடிவாதமும், இந்திய துணைக்கண்டத்தின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுறுவியிருப்பதே திரைப்படங்களின் ஆபாசக் கலாச்சாரத்திற்கான காரணம். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கலும் ஆபாசக் கலாச்சாரத்தின் துணை காரணிகளாக இருக்கின்றன. கற்பழிப்புக் குற்றங்களுக்கு உச்சபட்சமான கடும் தண்டனைகள் வழங்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஆனால் கலாச்சார சீர்கேட்டின் ஆணி வேர்களாக திரைப்படக் காட்சிகளையும், விளம்பரஙகளையும் கட்டுப்படுத்தாமல் கடும் தண்டனையால் மட்டும் பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை மறுக்க முடியாது. எனவே கலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் திரைப்படக் காட்சிகளும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையும் அரசு இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கின்றது.

6. திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு:

மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டிய திரைப்படங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் காட்டி  பொது சமூகத்தின் மனதில் விதைத்து வருகின்றது. இது மிகவும் ஆபத்தான போக்காகும். நாட்டின் ஒருமைப்பாட்டையும், மத நல்லினக்கத்தையும் சீர்குலைக்கும் இச்செயலை திரைப்பட தனிக்கை வாரியம் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து இது போன்ற காட்சிகள் இடம்பெறா வண்ணம் தனிக்கை செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


7. பூரண மதுவிலக்கு மற்றும் கந்துவட்டி ஒழிப்பு:

தீமைகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது மதுவாகும். நாட்டு மக்களின் ஆரோக்கியம் கெடுவது மட்டுமல்லாமல் அனைத்து விதமான குற்றச்செயல்களும் இந்த முக்கிய காரணமாக அமைகின்றது. நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதியினை பாதுகாக்கவும் அரசு பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.
 
அதேபோல் கந்துவட்டிக்கொடுமை இன்று ஏராளமான  குடும்பங்கலை சவக்குழியில் தள்ளிக்கொண்டிருக்கிறது. கேட்பதற்கு நாதியில்லாத சமூகமாக கந்து வட்டி தாதாக்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்கத்து அப்பாவி மக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மேலும் கந்து வட்டியை ஒழிக்க வேண்டுமென்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

Friday, December 28, 2012

ஜம்மு-கஷ்மீர் குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது. முதல் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய, அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தும் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உண்மை வெளிவந்துகொண்டிருக்கிறது.

2004 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜம்மு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ் மஸ்ஜிதில் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் க்ரேனேடு வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. 

தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று போலீஸ் கூறியது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை ஜம்மு-கஷ்மீர் போலீசாரிடம் என்.ஐ.ஏ கேட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா?என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டான். இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பிருப்பதை முந்தைய தினங்களில் என்.ஐ.ஏவிடம் சவுத்ரி வாக்குமூலம் அளித்திருந்தான்.

Tuesday, December 25, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய நிர்வாகிகள்

மலப்புரம்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவராக கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்த கே.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தாணியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அஸெம்ப்ளியில் நடந்தது.இதில் புதிய தேசிய தலைவராக கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்த கே.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக கேரளமாநிலம் மஞ்சேரியைச் சார்ந்த ஒ.எம்.அப்துல் ஸலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதர நிர்வாகிகள் பின் வருமாறு:
 
பேராசிரியர் பி.கோயா (கேரளா) – துணைத் தலைவர்
எம்.முஹம்மது அலி ஜின்னா(தமிழ் நாடு), இல்யாஸ் முஹம்மது தும்பே(கர்நாடகா) – செயலாளர்கள்
முஹம்மது ஷஹாபுத்தீன் – பொருளாளர்
 


தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:
 
இ.எம்.அப்துற்றஹ்மான், ஹாமித் முஹம்மது, பி.என்.முஹம்மது ரோஷன், எம்.அப்துல் ஸமத், அனீஷ் அஹ்மத், மவ்லானா உஸ்மான் பேக், எ.யா முஹ்யத்தீன், வழக்கறிஞர் எ.முஹம்மது யூசுஃப், எம்.முஹம்மது இஸ்மாயீல் ஆகியோர் ஆவார்.

Monday, December 24, 2012

கற்பழித்தால் பொது இடத்தில் தலை வெட்டு!

டெல்லியில் பேருந்தில் பல்கலைக்கழக மாணவியை கற்பழித்து ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த வழக்கில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் டெல்லியின் முக்கிய அரசு அலுவுலங்கள் முன்னாள் வரலாறு காணாத அளவுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்களால் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
 
குடியரசு தலைவர் மாளிகைக்கு முன்னால் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பு வேலிகளைத் தாண்டி குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். குடியரசு தலைவர் என்கிற பொம்மையின் மாளிகைக்குள் நுழைவதால் எந்த பயனும் இல்லை என்று.பாவம் மக்களுக்கு புரியவில்லை.
 
மக்கள் ஜனநாயக அடிப்படையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் நமது பயங்கரவாத போலீஸ்க்கு பொறுக்குமா! உடனே தண்ணீர் பீய்ச்சி அடித்தனர், கண்ணீர்ப் புகை, தடியடி பிரயோகம் என்று அராஜகத்தில் இறங்கினர். அதுமட்டுமல்லாது டெல்லியின் பல பகுதியில் நடந்த போராட்டத்திலும் இந்த போலீஸ் பொறுக்கிகள் தடியடி நடத்தி மக்களை கலைத்தனர். இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர்.
 
இந்நிலையில் கற்பழிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலை தேறிவருவதாகவும், அவர் செயற்கை சுவாசக் கருவியின்றி, தானாகவே சுவாசிக்கிறார் என்றும் தண்ணீரும், ஆப்பிள் பழரசமும் அருந்தினார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம் பூவை கசக்கி எறிந்தவர்களை அரபு நாடுகளில் மக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது போல் வெட்ட வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற கொடூர செயலில் ஈடுபட கொடியவர்கள் அஞ்சுவார்கள்.
*மலர் விழி*

Saturday, December 22, 2012

கருப்பு சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட முன்வர வேண்டும்!

மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பான NCHRO சார்பாக ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20/12/2012இல் சென்னையில் நடந்தது.
 
NCHROவின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப் கலந்தாய்வு கூட்டத்தின் துவக்க உரையை நிகழ்த்தினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் (PUHR) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கொடூரத்தன்மைக் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
 
வழக்கறிஞர் சத்ய சந்திரன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மனித உரிமை வழக்கறிஞர்கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பு (CRPP) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளை சார்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
கடந்த 2004-ஆம் ஆண்டு ’பொடா சட்டம்’ ரத்து செய்யப்பட்டவுடன் அதில் இருந்த கொடுமையான பிரிவுகள், சட்டத்திருத்தம் என்ற பெயரால் ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு 2008 இல் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது தேசத்தில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கி கொண்டு மத்திய அரசு 2-வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
 
தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களைப் பற்றி மக்களிடையே இருந்த விழிப்புணர்வு போன்று இந்த ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு இல்லை. தீவிரவாதம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களும், மாவோயிசம், நக்சலிசம் என்ற பெயரால் தலித் மற்றும் பழங்குடியின மக்களும் இந்த சட்டத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்படுகின்றன.
 
ஜனநாயகத்துக்கு எதிரான இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக போராடுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

Friday, December 21, 2012

மோடியின் வெற்றி மதசார்பின்மைக்கு கிடைத்த அடி!

                     குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்கு பதிவு எண்ணிக்கை 20.12.2012 காலை தொடங்கியது. இதில் பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் ஹிந்துத்துவா மோடி மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார். 

மோடி ஆட்சியை பிடித்திருப்பது மதசார்பின்மைக்கு கிடைத்திருக்கும் பெரிய அடி என்றே சொல்லலாம். ஹிந்துதுவாவுக்கு எதிரான மத சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், மற்றும் போலி கம்புனிஸ்ட்கள் போன்றோர்களின் உறுதியற்ற அரசியலின் விளைவாக பயங்கரவாதி மோடி மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறார்.

குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரத்தை முதல்வராக இருந்து கொண்டு இவரே திட்டமிட்டு நடத்தினார். இதில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், கூட்டம் கூட்டமாக முஸ்லிம் மக்கள் எரித்து கொலை செய்யப்பட்டனர். இதனாலேயே அமெரிக்கா மோடிக்கு விசா கொடுக்க மறுத்தது. இப்படிபட்ட உலகறிந்த ஹிட்லரை போன்ற பாசிச சிந்தனை கொண்ட ஒருவர் மீண்டும் முதல்வராகி இருப்பது மதசார்பின்மைக்கு கிடைத்திருக்கும் பெரிய தோல்வி என்றே சொல்லலாம்.

Monday, December 17, 2012

கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி கவிழ்கிறது!

காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை விட பா.ஜ.க மிகவும் ஆபத்தானது என்று சொல்லி அக்கட்சியில் இருந்து முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா விலகி தனி கட்சி தொடங்கிறார்.

அதில் இருந்து பாரதிய ஜனதாவின் சரிவு கர்நாடகாவில் தொடங்கியது. ""எடியூரப்பா தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா கட்சி, ஸ்ரீராமுலு தொடங்கியுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு பல பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள பாஜக அரசை நீக்க வேண்டும் என்று ஆளுநருக்கு கர்நாடகா மாநில எதிர் கட்சி தலைவர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ. க்கள் எடியூரப்பா கட்சிக்கும், 4 எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீராமுலு கட்சிக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக சட்டப் பேரவையில் பாஜகவின் பலம் 100 ஆகக் குறைந்துள்ளது.

சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை பாஜக இழந்துள்ளதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ன்படி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பாரதிய ஜனதா அரசைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பசுவதை தடுப்புச் சட்ட மசோதா, 11 தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!

சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜிந்தர் சௌத்ரிக்கு, ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (N I A ) தெரிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ஹரியாணா மாநிலம் பானிப்பட் அருகே செம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்பை சார்ந்த ராஜிந்தர் செளத்ரியை நேற்று சனிக்கிழமை இரவு தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்படும் 4ஆவது நபர் ராஜிந்தர் செளத்ரி. ஏற்கெனவே அசிமனந்தா, லோகேஷ் சர்மா, தேவிந்தர் குப்தா ஆகியோர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த ராஜிந்தர் செளத்ரி பற்றித் தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஹிந்துத்துவா தீவிரவாதியான அவர், தனது பெயரை மாற்றிக் கொண்டு மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனி அருகே தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும், வெடிகுண்டை சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தியது ராஜிந்தர் சௌத்ரி என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவில் நடந்த பல்வேறு மத கலவரங்களுக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் மூல காரணமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்  பயங்கரவாத முகம் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகிறது.

Saturday, December 15, 2012

தாயின் மனநிலையே சேயின் மனநிலை

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.

மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

Friday, December 14, 2012

கோத்ராவில் வளர்ச்சிக்கு அப்பால் முஸ்லிம்கள்!

கோத்ரா:குஜராத்தில் பாரபட்சமான வளர்ச்சியை காண விரும்பினால் நீங்கள் கோத்ராவிற்கு செல்லலாம். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரை பலிவாங்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதம் நிகழ்த்திக்காட்டிய இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைக்கு துவக்கம் குறித்த மண்ணில் வளர்ச்சியில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது.

சாலைகள் உடைந்து, கழிவு நீர் நிரம்பி, குடிநீர் கூட இல்லாத பகுதியாக இருந்தால் நீங்கள் உறுதியாக நம்பலாம்-அது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்று. கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு வளர்ச்சி என்பதே முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு எட்டவேயில்லை. மின்சாரம் மட்டுமே இங்குள்ள ஒரே ஆடம்பரம். தெருவிளக்கு, கழிப்பறை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள சாலைகள் உடைந்து சிதறிப்போய் கிடக்கின்றன. மழைக்காலங்களில் போக்குவரத்து முடங்கும். மாற்று சாலைக்கான கோரிக்கையும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

ஆனால், ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் நிலைமையே வேறு. நல்ல சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், அரசு திட்டங்கள் ஆகியவை அனைத்தும் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டுமே. 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு இங்கு முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித்தனியாக வாழ்கின்றார்கள். இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையான வாகா பார்டர் போல மூன்று பிரதேசங்கள் கோத்ரா நகரில் உள்ளன. முஸ்லிம் பகுதிக்கு அருகில் உள்ள ஹிந்து காலனியின் கேட் காலை ஆறரை மணிக்கு திறக்கும். இரவு எட்டரை மணிக்கு மூடப்படும். எல்லைகளில் இப்பொழுதும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோத்ரா ரெயில்வே நிலையத்திற்கு அருகே வாகனங்களை கூட முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித் தனியே 2 இடங்களில் பார்க் செய்கின்றனர். முஸ்லிம்கள் வாழும் போலன் பஜார், ஓல்ட் வெஜல்பூர் ரோடு, ஓஹ்வாட், கோண்டா, குயா ஆகியன ஹிந்துக்கள் வாழும் பகுதிகளை விட வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன. ஹிந்துக்கள் வாழும் பகுதிகளான கோத்ரா கிராமீயபகுதி, லுனாவாலா சாலை, தாஹோத் சாலை, பரோலி சாலை ஆகிய இடங்களில் பயணிக்கும் பொழுது மாற்றத்தை நேரடியாக காண முடியும். தார் போடப்பட்டு சீராக்கப்பட்ட சாலைகளும், அடிப்படை வசதிகளும் இப்பகுதிகளில் ஏராளம். அரசு திட்டங்களுடன், பா.ஜ.க எம்.பியின் வளர்ச்சி நிதியும் இப்பகுதிகளுக்கு மட்டுமே செலவிடப்படுகின்றன.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புதிய வீடுகளை கட்டவோ, கட்டிடங்களை கட்டவோ நகராட்சி அனுமதி வழங்குவதில்லை. அனுமதி கிடைக்க வேண்டுமென்றால் பல்வேறு அரசு அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும். ஆனால்,ஹிந்துக்கள் பகுதிகளில் கட்டிடங்களை கட்ட எவ்வித தடைகளும் இல்லை. விண்ணப்பித்தால் உடனே அனுமதி கிடைத்துவிடும். இனப்படுகொலையால் வாழ்விழந்த மக்களுக்கு வளர்ச்சியை கூட கண்ணில் காண்பிக்காமல் துரோகமிழைத்து வருகிறது மோடி அரசு.

Tuesday, December 11, 2012

காஸ்ஸா:ஹமாஸ் மாநாட்டில் ஒற்றுமை முழக்கம்!

காஸ்ஸா:ஃபலஸ்தீன் விடுதலை போராட்ட இயக்கமான ஹமாஸின் 25-வது ஆண்டு விழா பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும். 45 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைப் பிறகு பிறந்த நாட்டிற்கு ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் வருகை தந்தது ஃபலஸ்தீன் மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

அண்மையில் எட்டு தினங்களாக இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலால் தங்களுடைய போராட்ட வீரியம் சிறிதளவு கூட குறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் உள்பட ஐந்து லட்சம் பேர் காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தேசிய கீதத்தை பாடியும், ஃபலஸ்தீன் கொடியை வீசியும் இஸ்ரேல் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியும் வந்த மக்களை ஹமாஸ் ஸ்தாபக தலைவர் ஷேக் அஹ்மத் யாஸீன், அப்துல் அஜீஸ் ரன்தீஸி ஆகியோர் புன்சிரிக்கும் பிரம்மாண்ட புகைப்படத்தைக் கொண்ட மேடை வரவேற்றது.

ஹமாஸ் கமாண்டர்களின் கடுமையான பாதுகாப்பின் கண்காணிப்பில் மாநாட்டு நகரம் இருந்தது. காலித் மிஷ்அலும், இஸ்மாயீல் ஹானிய்யாவும் மேடைக்கு வந்தபொழுது உச்சபட்ச குரலில் மக்களின் தக்பீர் முழக்கம் வானை எட்டியது.

காலித் மிஷ்அலின் வருகையை யொட்டி காஸ்ஸாவிற்கு வந்த ஃபத்ஹ் இயக்கத்தின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டது சிறப்பாகும். ஐக்கிய ஃபலஸ்தீனுக்காக ஒன்றிணைந்து போராடுவோம் என்று காலித் மிஷ்அல் விடுத்த அழைப்பு ஃபலஸ்தீன் மக்கள் மிகவும் விரும்பிய வார்த்தைகளாகும்.

2006-ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக ஹமாஸின் மேடையில் ஃபத்ஹ் இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஒற்றுமையின் செய்தி இங்கிருந்து துவங்குகிறது என காலித் மிஷ்அல் அறிவித்த உடன் மக்கள் பலத்த கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர்.

ஒரே அரசு, ஒரே அதிபர், ஒரே பாராளுமன்றம்!- இதுதான் ஃபலஸ்தீனுக்கு தேவை என்று மிஷ்அல் கூறினார்.

மேலும் அவர் கூறியது: “இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம்! பிறந்த மண்ணின் விடுதலைக்கான போராட்டம் மரணம் வரை தொடரும். எங்களின் ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட நாங்கள் யாருக்கும் விட்டுத்தர மாட்டோம். புனித போரும், ஆயுத எதிர்ப்பு மட்டுமே எங்களது முன்னால் உள்ள ஒரே வழி. இஸ்ரேல் சிறைகளில் உள்ள அனைத்து ஃபலஸ்தீனர்களையும் விடுவிப்போம். இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க உதவிய ஈரானுக்கும், பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகித்த எகிப்தையும், துருக்கியையும் எங்களுக்கு ஆதரவளித்த சர்வதேச சமூகத்தையும் பாராட்டுகிறோம்.” இவ்வாறு காலித் மிஷ்அல் கூறினார்.

அணு உலையை இழுத்து மூடு! மாபெரும் ஆர்பாட்டம்!

கூடங்குளம் அணுஉலையை மூட சொல்லி இன்று மதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

 
கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு, போலீஸ் முற்றுகையைக் கைவிட்டு, பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இப்போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, பெண்கள் முன்னணி, தமிழ்நாடு மக்கள் கட்சிப், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தியாகி இம்மானுவேல் பேரவை, சேவ் தமிழ் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம், மா.பெ.பொ.க, தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், அமைப்புத் தோழர்களும் இதில் பங்கேற்றுக் கைதாயினர்

அணு உலையை இழுத்து மூடச்சொல்லி மீனவர்கள் போராட்டம்:
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடல் வழியாக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உவரி கூட்டப்புளி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று காலை 11 மணியளவில் சுமார் 500 படகுகளில் சென்று அணு உலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். கூடங்குளம் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்கி கொள்ள வேண்டும். போலீஸ் படையை இப்பகுதியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜெசுராஜ், முகிலன், மில்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிந்திக்கவும்: கூடன் குளம் அணு உலைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டத்தை கண்டும் காணாதது போல் நடிக்கும் சர்வாதிகாரி ஜெயாவும், மண்ணு மோகன் சிங்கிற்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அனைத்து இயக்கங்களும் ஒரே குரலில் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது வரவேற்க தகுந்தது. குறிப்பாக இப்போராட்டத்தில் மீனவர்களின் உயிர் தியாகங்களும் வீரியமான போராட்டமும் மிக முக்கியமானது அணு உலையை இழுத்து மூட மக்கள் இன்னும் வீரியமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு போபால், புகுஷிமா நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

Saturday, December 8, 2012

வால்மார்ட் வேண்டாம்!


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் தீர்மானத்தை பாராளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று கோரி SDPI கட்சி தர்ணா போராட்டத்தை நடத்தியது.
 
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டில் 30 சதவீத சில்லறை வியாபாரிகள் நடுவழியில் நிறுத்தப்படுவார்கள் என்று SDPI (சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா) கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.
 
நாட்டில் சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை அரசு வாபஸ் பெறவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
சிந்திக்கவும்: வால்மார்ட் விசயத்தில் BJP மவுன சாமியார் ஆனது, போலி கம்புனிஸ்ட்களும், கருணாநிதி மற்றும் கட்சிகளும், காங்கரஸின் காலை கட்டியாக பிடித்து கொண்டன. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது அபாயகரமானது. இதனால், நமது ஊர்களில் வீதி தோறும் பெட்டிக்கடை வைத்து பிழைக்கும், பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்?!

இந்தியாவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை கொண்டு வந்தே தீருவேன் என்று அந்நிய அடிமை மன்மோகன் சிங் திட்டங்களை வடிவமைக்கிறார். இவர் படித்த படிப்பும், மேதாவித்தனங்களும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரங்களை அழித்து பணக்காரர்களின் கைகளில் இந்தியாவை கொண்டு ஒப்படைக்கும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.