Sunday, January 8, 2012

சங்கப்பரிவாரங்கள கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பேரணி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கர்நாடக மாநில கூர்க் மாவட்டத்தின் கிளை சார்பாக பாகிஸ்தான் கொடியை ஏற்றிய சங்கப்பரிவாரங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று துணை ஆணையர் அலுவலகம் முன்பு மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சங்கப்பரிவாரங்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தாங்களாகவே பாகிஸ்தான்  நாட்டுக்கொடியை தாசில்தார் அலுவலகத்தில் வைத்து ஏற்றிவிட்டு இதனால வரை முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தி பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் இன்று அவர்களே செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது. இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டு அதன் மூலம் வகுப்பு வாத கலவரங்களை தூண்டுவதற்காகவே இவ்வாறு செய்திருக்கின்றனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் கே.பி அஃப்சர், எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட தலைவர் ஃபஜலுல்லாஹ், செயலாளர் அமீன் முஹ்சீன் மற்றும் செயலாளர் தம்லிக் தாரிமி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

protest in Coorg


 protest in Coorg
 
 
protest in Coorg

Thursday, January 5, 2012

பெண் டாக்டர் கொலையும் அதிர்ச்சி பின்னணியும்!

தூத்துக்குடி அழகிய துறைமுகப்பட்டினம். இதற்க்கு முத்து நகர் என்ற பெயரும் உண்டும். முக்கிய தொழில்களில் வளங்களில் ஒன்று உப்பு எடுப்பது.

இப்படிபாட்ட அழகிய நகரமான தூத்துக்குடி நீண்ட  காலமாக  ரவுடிகளின் கைகளில் சிக்கி
கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என்று ரவுடிகள் சாம்பராஜியமாக ஆகிப்போனது. 

தூத்துக்குடி முக்கிய ரவுடிகள் பட்டியலில்
திமுக எம்.எல்.ஏ. பெரியசாமி,  பசுபதிபாண்டியன் இவர்கள் அடக்கம். ரவுடிகள்தான் தூத்துக்குடியின்  எம்.எல்.ஏ.வாக வரமுடியும் என்ற ஒரு சிந்தனையும் நிலவிவந்தது. அப்படி நம்பித்தான் அதிமுக தூத்துக்குடியின் எம்.எல்.ஏ.வாக ரமேஷ் என்கிற ரவுடியை களம் இறக்கியது. பெரிய அரசியல் கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் தூத்துக்குடியில் திட்டமிட்டு ரவுடிகளை வளர்த்தனர்.

இப்படியாக
அரசியல் பொறுக்கிகள் கையில் சிக்கி தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்களும், உப்பல தொழிலாளர்களும் அவதிப்பட்டனர். இது போதாதென்று தூத்துக்குடியின் சுகாதாரத்தை கெடுக்க ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை என்கிற ஆக்டோபஸ் வந்திறங்கியது. வடநாட்டில் எங்கும் அனுமதி கொடுக்கப்படாத இந்த ஆலை தமிழகத்தின் அரசியல் பொறுக்கிகளால் தூத்துக்குடியில் நிறுவப்பட்டு இன்றும் அந்த மக்களை கொல்லும் கொலை கருவியாக ஜொலிக்கிறது.

இப்படி  பல கொலைகளும், ஆள்கடத்தல்களும் நடக்கும் தூத்துக்குடி நகரம்
இன்று அரசு டாக்டர் கொலை என்றதும்  அரசு இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ளன. அப்பாவி மக்கள் கொல்லப்படும்  போது போலீஸ் பொறுக்கிகள் லஞ்சத்தை வாங்கிகொண்டு அதை ஊக்குவித்து வந்தனர். ஒரு டாக்டர் கொலையானதும் மொத்த டாக்டர்களும் ஊர்வலம், ஸ்ட்ரைக் என்று தமிழகம் முழுவதும் கிளம்பிவிட்டார்கள். இதே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது  இவர்களுக்கு ஆதரவாக யார் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள்.

டாக்டர் தொழில் என்பது ஒரு புனிதமானது, அது என்று வியாபாரம் ஆக்கினார்களோ அன்றே டாக்டர்கள் இதுபோன்ற அனத்தங்களை சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். சாதாரண பிரசவம் ஆக இருக்கும்
எத்தனையோ பெண்களை பணத்துக்காக ஆப்பரேசன் செய்து கொன்றிருக்கிறார்கள். மொத்தத்தில் டாக்டர்களை பற்றி மக்கள் மனதில் ஒரு கெட்ட அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
அதிகமான டாக்டர்கள் பண ஆசையில் செய்யும் கொலை பாதகத்துக்கு இதுபோல் சில டாக்டர்கள் பலியாகி போகிறார்கள் என்பது ஒரு சோகமான ஒரு நிகழ்வே. அரசு இயந்திரங்கள் சாதாரண மக்கள் விசயத்திலும் நீதி செலுத்த வேண்டும். அதுபோல் மக்களை சுரண்டும் டாக்டர்கள் விசயத்தில் சிறப்புச்சட்டம் கொண்டுவந்து இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
                                                         
                                                          *மலர்விழி*

Wednesday, January 4, 2012

மதக் கலரங்கள் – 2011

தற்போதுள்ள நிலையில் கலவரம் இல்லாத இந்தியா என்பது வெறும் கனவாகவே உள்ளது. எல்லா வருடங்களைப் போலவும் சென்ற வருடம் அதாவது 2011-ம் ஆண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக பல கலவரங்கள் நடைபெற்றுள்ளன.


கடந்த 1992 -93-ம் ஆண்டு நடந்த மும்பை கலவரங்கள் போன்று மற்றும் 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் போன்று எதுவும் நடைபெறவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் என்றாலும். அதற்கு சிவசேனா மற்றும் பிஜேபி போன்ற கட்சிகள், முன்பு நடத்தியது போன்று பெரிய அளவில் கலவரங்களை ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதே காரணம்.

கடந்த 2011-ம் வருடத்தில் முதலில் ஜனவரி 13-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் உமர்கடியில் சில ஹிந்து இளைஞர்கள் முஸ்லிம் பெண்களை ஈவ் டீசிங் செய்ததைத் தொடர்ந்து கலவரம் வெடித்ததில் இருபிரிவினரும் கல்லெறிதலில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை அதிகாரி தியோகட்டே திறமையாக செயல்பட்டு கலவரத்தை கட்டுபடுத்தியதுடன் பாதுகாப்பிற்காக கூடுதல் படைகளை பெற்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

மேலும் பிப்ரவரி 7-ம் தேதி பாதிரியார் ஒருவருக்கும் முஸ்லிம் ரிக்சா ஓட்டுனர் ஒருவரும் சிறிய தகராறு ஏற்பட்டது. இதற்கு முஸ்லிம் ஹிந்து மதச்சாயம் பூசப்பட்டதால் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் வந்து கல்லெறிதலில் ஈடுபட்டதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வீடுகள் , கடைகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் இக்கலவரத்தில் பழங்குடியினரும் தாக்கப்பட்டனர். மேலும் போலிஸூம் கலவரக் காரகளுடன் சேர்ந்து முஸ்லிம்கள் மீது லத்தி சார்ஜில் ஈடுபட்டனர். இதில் பெருமளவு முஸ்லிம்களின் சொத்துக்களே சேதப்படுத்தப்பட்டன.

மிகவும் பதட்டமான பகுதியான குஜராத்தின் பரோடாவில் பிப்ரவரி 16-ம் தேதி ஈத் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த வாயிலை தீவைத்து எரித்ததால் கலவரம் மூண்டது. மேலும் இப்பகுதியில் முஸ்லிம்களும் கஹர்களும் அடிக்கடி மோதிக் கொள்வது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மார்ச் 2-ம் தேதி மீலாது நபி விழா சமயத்தில் கொடிகளையும் போஸ்டர்களையும் கிழித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னொரு பதட்டமான பகுதியான ஔரங்காபாத்திலும் கடந்த மார்ச் 20-ம் தேதி முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் பெண்களும் எஸ்.பி. கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது பர்தா அணிதிருந்த முஸ்லிம் பெண்கள் மீது கலர் பொடிகளை தூவி கேலிசெய்தனர். மேலும் இவர்களை தடுக்க முயன்ற இளைஞர்கள் மீது கத்தி போன்றவற்றால் தாக்குதல் நடத்தியதில் 4 மாணவர்கள் பலத்த காயமுற்றனர். மேலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மும்பை தாராவி பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள் நடத்தப்பட்டது.

மேலும் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மீருட் அருகில் மஸ்ஜித் ஒன்றில் 3 பேர் வந்து தண்ணீர் கேட்டனர். குளிர்ந்த தண்ணீர் தரவில்லை என்பதற்காக அங்கிருந்த இமாம் மற்றும் சில குழந்தைகள் உட்பட அனைவரையும் அடித்து உதைத்தனர். அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பள்ளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 8-ம் தேதி ஜூலை மகாராஷ்டிரா ஆந்திரா எல்லையில் உள்ள அதிலாபாத் மாவட்டத்தில் 6 முஸ்லிம்களை எபிவிபி மற்றும் பிஜேபியின் மாணவர் அமைப்பும் சேர்ந்து உயிருடன் தீவைத்து எரித்தனர். மேலும் கடந்த ஜூலை 12-ம் தேதி ஆக்ராவில் மண்டலா பகுதியிலும் கலவரம் நடந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 8-ம் தேதி மொராதாபாத்தில் சிலர் முஸ்லிம் முஹல்லாவின் வழியாக கங்கை நீரை எடுத்துச்செல்ல முயன்றபோது நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியதால் போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். மேலும் அன்று இரவு முஸ்லிம்கள் தராவிஹ் தொழுகைக்கு வந்தபோது ஹிந்துக்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் கலவரம் ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் தீக்கு இரையாயின.

மேலும் ஆகஸ்ட் 22-ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திலும் மற்றும் உத்திர பிரதேசத்தில் 25-ம் தேதியும் இரு பிரிவினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு மதச் சாயம் பூசப்பட்டதால் அங்கு கலவரம் ஏற்பட்டு இரு பிரிவினரும் கல்லெறிதலில் ஈடுபட்டனர். மேலும் ஆகஸ்ட் 25-ம் தேதி தானே மாவட்டத்தில் ஜன்மாச்தமி வேளையில் சில ஹிந்துத்வா வெறியர்கள் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் முஸ்லிம்களின் பல சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

மேலும் செப்டம்பர் -1 ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகர் மாவட்டத்தில் ஈத் தினத்தன்று இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. வழக்கம் போல் இந்த கலவரத்திலும் போலீசார் ஒருதலை பட்சமாகவே நடந்து கொண்டனர். பாதிக்கப்பட்டு புகார் தெரிவிக்க சென்ற முஸ்லிம்கள் 307 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் கத்தி மற்றும் வாட்களை கொண்டு தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்ஜிதிற்கு அருகில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கலவரம் நடத்தப்பட்டதில் ௨ முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமுற்றனர். மேலும் ஆந்திரா குர்நூல் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் ஏற்பட்ட கலவரத்தில் 100 _க்கும் அதிகமானோர் காயமுற்றனர் இதில் 3 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மகாராஷ்டிரா நந்துர்பார் பகுதியில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் ஏற்பட்ட கலவரத்தில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மேலும் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்திலும் போலீசார் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடந்துகொண்டனர். மேலும் காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் பாட்டில் தான் கலவரத்திற்கு முக்கிய காரணம் என்றும் முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கலவரம் தொடர்பாக 50 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர் ஆனால் வெறும் 12 முஸ்லிம் அல்லாதவர்கள் மாட்டுமே கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கலவரத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக வாழ்ந்த வீடுகளுக்கு கூட முஸ்லிம்கள் செல்ல அச்சமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த வருடத்தின் மிகப்பெரிய கலவரங்களில் ஒன்றான ராஜஸ்தான் பாரத்பூர் கலவரம் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த கலவரம் ஒரு நிலம் மற்றும் மஸ்ஜித் தொடர்பாக குஜ்ஜார் இன மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆர்.எஸ்.எஸ்-ன் தூண்டுதலால் நடந்தேறியது. இதில் காவல்துறையினர் கலவரத்தை அடக்குவதை விட்டு குஜ்ஜார்களுடன் சேர்ந்து முஸ்லிம் மக்களை கொடூரமாக கொலைச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்றுமொரு கலவரம் பிஜேபி ஆளும் மாநிலமான உத்தராகண்டில் ருத்ராபூர் பகுதியில் நடந்துள்ளது. முன்னதாக ஹிந்துத்வா அமைப்புகள் இரண்டு கலவரங்களை திட்டமிட்டது அதில் ஒன்று தோல்வி அடைந்தது மற்றொன்று வெற்றி பெற்றது. முதலில் செப்டம்பர் 29-ம் தேதி குரான் பிரதிகள் சிலவற்றை ரத்தத்தில் நனைத்து கோயிலின் அருகே விட்டு சென்றனர் இதனால் முஸ்லிம்களும் ஹிந்துக்களும் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். இரண்டாவதாக அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று குரான் பிரதிகள் சிலவற்றை இறைச்சியுடன் சேர்த்து கோயிலின் அருகில் விஷமிகள் சிலர் கட்டி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 150 முஸ்லிம்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிந்துக்களும் இன்னொரு புறத்திலிருந்து முஸ்லிம்களைத் தாக்கியதால் பெரும் கலவரம் வெடித்தது.

இதில் காவல்துறையின் அறிக்கைப் படி 30 பொதுமக்கள் காயமுற்றனர் மேலும் 100 வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ருத்ராபூர் அருகே டெல்லி- நைனிடால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் வாகனங்கள் முற்றிலும் எறிந்த நிலையில் கிடந்தன. மேலும் 100 கடைகளுக்கு மேல் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக 37 பேர் மீது வழக்கு போடப்பட்டு அதில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரும் மாவட்ட ஆட்சியாளரும் சரியான தருணத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களுக்கு இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாம் பார்த்த அனைத்து கலவரத்திற்கும் பெரிய காரணம் எதுவும் இல்லை என்பதும் சிறிய காரணங்களுக்காக கலவரம் வருகிறது என்றால் இதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவாவின் வெறுப்பூட்டும் தொடர் பிரச்சாரம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும் காவல்துறையினரின் முஸ்லிம்களுக்கு எதிரான சார்பு நடவடிக்கையும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். இந்த காரணங்கள் அனைத்தும் களையப்படாமல் கலவரம் இல்லாத இந்தியாவை நாம் உருவாக்குவது என்பது வெறும் கனவே என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் "பள்ளி செல்வோம்" பிரச்சாரம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த பல வருடங்களாக கல்வி பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் "ஸ்கூல் சலோ" என்ற முழக்கத்தை முன் வைத்து கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வருடம் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டது. ஏழ்மையான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களிடையே இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இப்பிரச்சாரம் நடத்தப்பட்டது.


School Chalo in West Bengal
மேற்கு வங்க பாப்புலர் ஃப்ரண்டின் மாநில நிர்வாகிகளால் பலவேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று "சர்வசிக்ஷ்சா கிராம்" (அனைத்து கிராமங்களிலும் கல்வி பெற்ற கிராமங்களாக) உருவாக்கும் பணியாக 8 கிராமங்களில் கல்வி பற்றிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
 
West Bengal School Chalo

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக  மேம்பாட்டுத்துறையின் நிர்வாகியாக செயலாற்றி வரும் தேசிய செயற்குழு உறுப்பினர் ஓ.எம்.ஏ. அப்துல் ஸலாம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 70% முஸ்லிம்கள் வாழும் முர்ஷிதாபாத்திலுள்ள மஹால்தர்பாரா என்ற கிராமத்தில் வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஜுகூர் கிராம மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அடிப்படையில் 10 இடங்களில் அதற்கான சேவையை செய்து உள்ளது. அபில்பூர் கிராமத்தில் இலவச டியூஷன் சென்டர் ஒன்றை துவக்கியுள்ளது. இவற்றை ரிஹாப் இந்தியாவின்  தலைவர் இ.அபூபக்கர் துவக்கி வைத்தார்.
 
W.B school Chalo

இந்நிகழ்ச்சியில் உரை யாற்றிய அவர் கூறும்போது சமூக மேம்பாட்டை கருத்தில் கொண்டு இவ்வாறான சேவைகள் மேற்குவங்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் முர்ஷிதாபாத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இத்தகைய சேவைகள் தொடரும் என்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மேற்குவங்க மாநில செயலாளர் முஹம்மது ஷிஹாபுதீன், சமூக ஆர்வளர் நூரி ஹுதா, ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கிராம வாசிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Sunday, January 1, 2012

முர்ஷிதாபாத்தில் ரிஹாப் சார்பாக 3 திட்டங்கள் துவக்கம்

கொல்கத்தா:கல்வி வளர்ச்சி, அடிப்படை வசதிகள், சுய தொழில் உதவி ஆகிய துறைகளில் மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு சாரா அமைப்பான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் நடத்தும் நீண்டகால திட்டங்களின் ஒரு பகுதியாக கம்யூனிட்டி செண்டர்கள், குடிநீர்திட்டம், வட்டியில்லா சிறுகடன் உதவித் திட்டத்தின் அடிப்படையில் ரிக்‌ஷா விநியோகம் ஆகியவற்றின் துவக்க நிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை ஃபவுண்டேசனின் சேர்மன் இ.அபூபக்கர் துவக்கி வைக்கிறார்.

இன்று காலை மஹல்தர்பாரா கம்யூனிட்டி செண்டரில் 10 கம்யூனிட்டி செண்டர்களின் அதிகாரப்பூர்வமான திறப்பு விழா நடைபெறுகிறது. ஸ்ரீகிருஷ்ணபூர், ஹாஜிபாரா, அகுண்டாபாதியா, தும்பாரா, பல்காச்சி, கோஹித்பூர், கோபிநாத்பூர், ஸொலுவா, தெகாரிபாரா ஆகிய இடங்களில் இதர கம்யூனிட்டி செண்டர்கள் இயங்கும்.டியூசன் வகுப்புகள், கல்வி வழிகாட்டி, தொழில் பயிற்சி, இதர உதவிகள் ஆகியன இம்மையங்களில் அளிக்கப்படும்.

இன்று மதியம் ஜுகோரில் குடிநீர் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி நடைபெறும்.முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஸகார்திகி பகுதியில் வறட்சி பிரதேசங்களில் 13 குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டமாகும் இது. தற்பொழுது பல கிலோமீட்டர்கள் நடந்து இப்பகுதி மக்கள் குடிநீரை சேகரிக்கின்றனர்.

நாளை காலை பாக்குரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுயதொழில் உதவித் திட்டத்தின் இரண்டாவது கட்டம் துவங்கும். வட்டியில்லா கடன் திட்டத்தின் அடிப்படையில் 20 பேருக்கு சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அளிக்கப்படும்.

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் பொதுச்செயலாளர் ஒ.எம்.அப்துஸ்ஸலாம், மேற்குவங்காள மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஷஹாபுத்தீன், எஸ்.டி.பி.ஐ மேற்குவங்காள மாநில தலைவர் தஈதுல் இஸ்லாம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள்.
 

அரசியல் கோமாளிகள்!

1) தானே’ புயலின் கோரத்தாண்டவத்தில் 30க்கும்
அதிகமானோர் பலியாயினர். 20 ஆயிரம் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்தன. அரசு இரண்டு இலட்சம் உதவி.

* அரசு இதை குறைந்தது ஐந்து இலட்சமாக அறிவிக்க வேண்டும். என்ன பிச்சையா போடுறீங்கள்! அரசு கஜானாக்கள் இதுபோன்ற இயற்க்கை அனத்தங்களுக்கு துறக்கட்டும் இலவசங்களுக்கு அல்ல.


2) நேர்மையான, திறமையான நிர்வாகத்தை அளிக்க பாடுபடுவேன்: பிரதமர் மன்மோகன்  புத்தாண்டு செய்தி!


* பொருளாதார மேதையான இவரை விட லல்லு பிரசாத் எவ்வளவோ தேவலை அவரு  நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த இந்திய ரயில்வேயை லாபகரமாக மாற்றினார்.  அனால் இந்த பொருளாதார புலி  பிரதமார இருந்தும் நாடு படுகுழிக்குள் போகிறது.


3) நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாடப்படுவதை எதிர்த்து அந்த ஓட்டலை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் 50 பேர் கைது.


* மக்களை பாதிக்கும் எத்தனயோ பிரச்சனைகள் இருக்க இவர்கள் புத்தாண்டு கொண்டாடத்திற்கு போராட்டம் நடத்து கின்றனர். மக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு போராட்டம் செய்யாது ஹிந்துத்துவா சித்தாந்தங்களை பாதுக்காக்க போராட்டம் நல்லா இருக்கு.


4) "துரோக கும்பலுக்கு மன்னிப்பே கிடையாது,'' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா சூளுரை.


* ஆமாம் இவரை முதல்வர் ஆக்கியதற்கு நல்லா குடும்ப சண்டை குடுமி சண்டை போடுகிறார்.


5) தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மை, உம்மன்சாண்டிக்கு கலைஞர் பதில் கடிதம்.
 

* ஓய்ந்து கிடந்த கருணாநிதி அறிக்கை போரை நடத்த ஆரம்பிச்சிட்டார். முல்லை பெரியாரை வைத்து அடுத்த தேர்தல் வரை காலம் ஓடும்.

6) அமெரிக்க இந்தியரும் நோபல் பரிசு பெற்ற வருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் அரசு "நைட்ஹூட்' விருது அறிவித்துள்ளது.

* இவருக்கு நோபல் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்து சொல்லினர் நமது இந்திய தேசபக்தி அடிமைகள். எனக்கு வாழ்த்து சொல்லி என்னை தொந்தரவு படுத்த வேண்டாம் என்று சொன்ன ஆணவம் பிடித்தவர் இவர்.


7) புத்தாண்டு கொண்டாட்டத்தில் விஷ சாராயம் குடித்த எட்டு கிராம மக்கள் பலியானார்கள்.


* முதலில் கள்ள சாராயம் காய்ச்சும் கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.  இலவசங்களை அறிவிக்க அரசியல் பொறுக்கிகள் டாஸ்மார்க் நடத்துகிறார்கள். முழுமையான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும்.

குர்ஆனில் சிலந்தியின் வீடு

சிலந்தியின் வீடு ஓர் அறிவியல் அற்புதம்
அய்னுஷ்-ஷம்ஸு பல்கலைக்கழகத்தின் விவசாயக்கல்லூரியில் பணியாற்றும் பூச்சிகள் தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் அல்யம்மீ பின்வரும் தகவலைக் கூறுகிறார்:-
குர்ஆனில் அல்லாஹ் சிலந்தியை உதாரணமாகக் கூறுகிறான்.
مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتاً وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ لَوْ كَانُواْ يَعْلَمُونَ
அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும்இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
இந்த வசனத்தில் இத்தகதத் பைத்தன் (اتخذت بيتا ) ‘ அது வீட்டைக் கட்டியதுஎன்று இறைவன் ஆண்பாலில் துவங்கிகட்டியதுஎன்ற வினைச்சொல்லை பெண்பாலில் கூறியுள்ளான். இலக்கண மரபுப்படி ஆண்பாலுக்குப்பிறகு பயனிலையை ஆண்பாலாகத்தான்; கூறவேண்டும். ஆனால் இங்கே பெண்பாலாகக் கூறியதைப் பார்க்கும் போது இலக்கணப்பிழையாகத் தோன்றலாம்.
இது மனிதன் இயற்றிய சொல்லாக இருந்தால் இலக்கணத்தில் தவறு நிகழ்ந்ததாக நினைத்து விட்டுவிடலாம். ஆனால் உலகின் அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவன் அன்கபூத்தைப் பற்றிக் கூறும்போது அவனது சொல்லில் இலக்கணத்தவறு நிகழமுடியாது. அவ்வாறு அவன் கூறியிருந்தால் ஏற்கத்தக்க காரணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும் என ஆய்வு தொடர்ந்தது.
அவை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. அன்கபூத் என்ற சொல் இலக்கண மேதைகளால் ஆண்பாலிலும் பெண்பாலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஆண்பால் அன்கப் என்பதாகும். அன்கபூத் என்பது ஆண், பெண் இனத்தையே குறிக்கும் பொதுவான சொல்லாகும். ஆகவே இதில் இலக்கணத் தவறு நிகழவில்லை.
2. அன்கபூத்: ஆண் பெண் சிலந்தியில் ஆண் சிலந்தி வலை பின்னாது. பெண் சிலந்தி மட்டும் தான் அதன் வலையைப் பின்னமுடியும்; என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர். காரணம் அதன் உடல் அவ்வாறு படைக்கப்பட்டுள்ளது.அதன் அடிவயிற்றில் பசைபோன்ற திரவம் வெளியாகிறது. மாததந்திர ருது போன்ற ஒரு செயல் அதில் நிகழ்கிறது.
3. பெண்சிலந்தி பருவ வயதை அடையும் போது தனது உறவுக்காக இவ்வாறு வீட்டை எழுப்புகிறது. ஆண் சிலந்தி வலிமை பெற்றிருந்தும்; அதனால் வீடு கட்ட முடியாது.
4. பெண் சிலந்தியின் வயிற்றில் உற்பத்தியாகும் நூலில் பசை இருக்கும். ஏதிரிப் பூச்சிகள் அதன் மீது வந்தமர்ந்தால்; அதில் அவை ஒட்டிக் கொள்ளும். அவை அதற்கு உணவாக ஆகிவிடுகிறது.
எனவே வலைபின்னும் இச்செயல் பெண் இனத்தில் தான் நிகழ முடீயும் என்பதால் தான் அல்லாஹ் பெண்பாலில் கூறியுள்ளான்.
1400 ஆண்டுகளுக்கு முன் பெண் இனம் தான் வலை பின்னும் என்பது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு எவ்வாறு தெரிந்திருக்க முடியும்? ஆகவே சிலந்தியைப் படைத்த இறைவன் தான் இந்த பேருண்மையை உலகுக்குக் கூற முடியும்.ஆகவே இறைவனின் வேதமான அல்-குர்ஆன் அல்லாஹ்வின் அருள்மறை என்பது ;தன் மூலம் நிரூபணமாகிறது.