Sunday, December 30, 2012

பாலியல் பலாத்கார மரணம்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் கண்டனம்!

புதுடெல்லி:இந்தியாவின் தலைநகரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

இளம்பெண்ணின் மரணம் இந்திய பெண்களின் பாதுகாப்பைக் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. கொடூரமான இச்சம்பவத்தில் அரசுதான் முக்கிய பொறுப்பாளி. எல்லை மாநிலங்களிலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை காண்பதற்கு இச்சம்பவம் அதிகாரிகளுக்கு தூண்டுகோலாக அமையவேண்டும். அங்கேயெல்லாம் குற்றம் புரிவது போலீசும், ராணுவமும் என்பதால் நிலைமை கடுமையானது. இந்திய மக்கள் நீதி கேட்டு வீதிகளில் இறங்கி போராடுவது நல்ல அறிகுறியாகும்.

நீதிக்கான இந்த முழக்கம் உயர் ஜாதியினருக்கான விவகாரத்தில் மட்டுமாக ஒதுங்கிவிடக் கூடாது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை அளிப்பதற்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உணர்ச்சியின் பிரதிபலிப்பாகும். இது கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும். சட்டத்தின் குறைபாடு இல்லை. மாறாக, அதிகாரிகளின் பொறுப்புணர்வில் ஏற்பட்ட வீழ்ச்சியே இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற காரணமாகும். சட்டம் கடுமையாக்கும் பொழுது அவை துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

அனைத்து குற்றவாளிகளுக்கு பாடமாகும் விதமாக குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து பிரிவினருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் பாரபட்சமற்ற முறையில் செயல்படவேண்டும் என்று கே.எம்.ஷெரீஃப் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

எழுச்சியுடன் தொடங்கிய இமாம்களின் மாநாடு


சென்னை: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக இன்று காலை சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலி "இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு" எழுச்சியுடன் தொடங்கியது.
காலை 9 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழக தலைவர் இபுராஹிம் உஸ்மானி அவர்கள் கொடியேற்றி வைத்து இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுச்செயலாளர் ஆபிருதீன் மன்பஈ திறந்துவைத்தார். காலை 10 மணியளவில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஜமாத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் மெளலானா மன்சூர் காஷிஃபி அவர்கள் காதியானிகளின் உருவாக்கம் தொடர்பான உரையை நிகழ்த்தினார். அடையாள் ஜூம்மா மஸ்ஜிதின் தலைமை இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் இஸ்லாமிய கல்வி என்ற தலைப்பிலும் இன்னும் பிற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவாற்றினர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி, செயலாளர் சாகுல் ஹமீது பாகவி, பொருளாளர் முஹம்மது ஈஸா, ஐக்கிய சமாதானப்பேரவையின் தலைவர் ஹாமித் பக்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆலிம்கள் இதில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. முஸ்லிம் தனியார் சட்டம்:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 25ன் படி இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திர உரிமையை ( ) வழங்குகின்றது. அதனடிப்படையில் சிவில் விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தாரும் அவரவர் மதச்சட்டங்களை பின்பற்றிக் கொள்ளலாம். முஸ்லிம்கள் தங்களுடைய ஷரீஅத் சட்டமான "முஸ்லிம் தனியார் சட்டத்தை" பின்பற்றி வருகின்றனர். ஷரீஅத் சட்டத்தின் படி ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதற்கு பருவமடைந்துவிட்டால் போது; 18 வயது பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் மணப்பெண்ணின் திருமணத்தகுதி குறித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் சிறுமியர் திருமணத்தை தடுத்து நிறுத்துகிறோம் என்ற ஒரு மாயையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகத்தைச்சேர்ந்த அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகலும் முஸ்லிம்களின் திருமணத்தை தடுத்தி நிறுத்தி, மணப்பெண்ணை கைது செய்து சீர்திருத்த இல்லத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து வைக்கும் அவல நிலை சமீபகாலமாக தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. இது முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். முஸ்லிம் பெயர் தாங்கிளாக அரசுப் பணியாற்றிவரும் அதிகார மட்டத்தில் உள்ள சில கருப்பு ஆடுகளும் இதற்கு துணை போகின்றனர். ஷரீஅத் சட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு அதிகாரிகளே இது போன்று சட்டத்தை மீறி செயல்படுவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் தாந்தோன்றித்தனமான இந்த செயலை கட்டுப்படுத்துவதும், ஷரீஅத் சட்டத்தை மீறாத வகையில் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

2. கட்டாய திருமண பதிவுச்சட்டம்:

 முஸ்லிம் சமூகத்தின் திருமணங்களை முறையாக பதிவு செய்யும் நடைமுறை ஒவ்வொரு முஹல்லாவில் உள்ள பள்ளிவாசலிலும், ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே கட்டாய திருமண பதிவுச்சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கென்று தனியாக அரசு விதிவிலக்கு அளிக்க வேண்டும். முஹல்லா பதிவேட்டில் உள்ள பதிவுகளை திருமணம் குறித்தான சான்றாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


3. மத வழிபாட்டுத்தலங்கள் மற்ரும் வக்ஃபு சொத்துக்கள்:

தமிழகத்தில் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத்தலங்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவதும், அவற்றை சேதப்படுத்துவதும், அவற்றின் கண்ணியத்தை குழைக்கும் செயல்கள் சமூக விரோதிகளால் அரங்கேற்றப்பட்டு வருவது கவலைக்குறியது, கண்டிக்கத்தக்கது. மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், இரு சமூகங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தும்  வண்ணம் கெட்ட எண்ணத்துடன் செயல்பட்டு வரும் அத்தகைய‌ சமூக விரோதிகளை இனம் கண்டு, கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்ட நட்வடிக்கை எடுக்குமாறும், பொது அமைதியை சீர்கெடுக்கும் வண்ணம் செயல்பட்டு வரும் இவர்களின் சதிச்செயலை முறியடிக்கவும், சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.


4. வக்ஃபு சொத்துக்கள்:

வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் நாடெங்கிலும் ஆக்கிரமிக்கப்பட்டிருகின்றன.  அரசுகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது மாபெரும் அநீதியாகும். அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளிலும், சமூக பொருளாதார ரீதியிலும் முஸ்லிம் சமூகம் மிகவும் பின் தங்கியிருப்பதை சர்ச்சார் அறிக்கை  தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலையை முன்னேற்ற இடஒதுக்கீடும், பிரத்யோக நலத்திட்டங்களும் எப்படி முக்கியச் காரணிகளாக அமைகின்றதோ, அதே போன்று வக்ஃபு சொத்துக்கள் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் பயன்பாட்டிற்காக அமைத்துக்கொடுப்பதும் மற்றொரு காரணியாக விளங்கும். எனவே நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருக்கு வக்ஃபு சொத்துக்களை மீட்பதற்கு உரிய செயல்திட்டங்களை வகுத்து, இனியும் தாமதிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகலை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


5. திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் கலாச்சார சீர்கேடு:

மனித வாழ்வின் ஒழுக்க விழுமியங்களை தகர்க்கும் வண்ணம் வன்முறைக்காட்சிகளும், ஆபாசமும் திரைப்படங்களிலு நாளுக்கு நால் அதிகரித்து கொண்டே வருவது கலாச்சார சீர்கேட்டின் உச்ச கட்டத்திற்கு மனித சமூகத்தை அழைத்துச் செல்கின்றது. பெண்களை ஆபாசமாகவும், போகப்பொருளாகவும், திரைப்படங்கல் காட்டி வருவதால் நாட்டில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கற்பழிப்புக்களும் நாளுக்கு நால் அதிகரித்து கொண்டே வருவதை காண முடிகிறது. பெண்களை மதித்து போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வை மறக்கடித்து, பெண்களுக்கெதிரான வக்கிர குணத்தை இந்த ஆபாச காட்சிகள் ஆண்கள் மனதில் விதைக்கின்றன. இதுவே பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. போலிப் பெண்ணுரிமை பேசிவரும் பெண்ணியவாதிகளின் குருட்டுப் பிடிவாதமும், இந்திய துணைக்கண்டத்தின் நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுறுவியிருப்பதே திரைப்படங்களின் ஆபாசக் கலாச்சாரத்திற்கான காரணம். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கலும் ஆபாசக் கலாச்சாரத்தின் துணை காரணிகளாக இருக்கின்றன. கற்பழிப்புக் குற்றங்களுக்கு உச்சபட்சமான கடும் தண்டனைகள் வழங்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஆனால் கலாச்சார சீர்கேட்டின் ஆணி வேர்களாக திரைப்படக் காட்சிகளையும், விளம்பரஙகளையும் கட்டுப்படுத்தாமல் கடும் தண்டனையால் மட்டும் பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை மறுக்க முடியாது. எனவே கலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் திரைப்படக் காட்சிகளும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையும் அரசு இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கின்றது.

6. திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு:

மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டிய திரைப்படங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் காட்டி  பொது சமூகத்தின் மனதில் விதைத்து வருகின்றது. இது மிகவும் ஆபத்தான போக்காகும். நாட்டின் ஒருமைப்பாட்டையும், மத நல்லினக்கத்தையும் சீர்குலைக்கும் இச்செயலை திரைப்பட தனிக்கை வாரியம் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து இது போன்ற காட்சிகள் இடம்பெறா வண்ணம் தனிக்கை செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


7. பூரண மதுவிலக்கு மற்றும் கந்துவட்டி ஒழிப்பு:

தீமைகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது மதுவாகும். நாட்டு மக்களின் ஆரோக்கியம் கெடுவது மட்டுமல்லாமல் அனைத்து விதமான குற்றச்செயல்களும் இந்த முக்கிய காரணமாக அமைகின்றது. நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதியினை பாதுகாக்கவும் அரசு பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.
 
அதேபோல் கந்துவட்டிக்கொடுமை இன்று ஏராளமான  குடும்பங்கலை சவக்குழியில் தள்ளிக்கொண்டிருக்கிறது. கேட்பதற்கு நாதியில்லாத சமூகமாக கந்து வட்டி தாதாக்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்கத்து அப்பாவி மக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மேலும் கந்து வட்டியை ஒழிக்க வேண்டுமென்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

Friday, December 28, 2012

ஜம்மு-கஷ்மீர் குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது. முதல் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய, அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தும் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உண்மை வெளிவந்துகொண்டிருக்கிறது.

2004 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜம்மு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ் மஸ்ஜிதில் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் க்ரேனேடு வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. 

தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று போலீஸ் கூறியது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை ஜம்மு-கஷ்மீர் போலீசாரிடம் என்.ஐ.ஏ கேட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா?என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டான். இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பிருப்பதை முந்தைய தினங்களில் என்.ஐ.ஏவிடம் சவுத்ரி வாக்குமூலம் அளித்திருந்தான்.

Tuesday, December 25, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய நிர்வாகிகள்

மலப்புரம்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவராக கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்த கே.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தாணியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அஸெம்ப்ளியில் நடந்தது.இதில் புதிய தேசிய தலைவராக கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்த கே.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக கேரளமாநிலம் மஞ்சேரியைச் சார்ந்த ஒ.எம்.அப்துல் ஸலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதர நிர்வாகிகள் பின் வருமாறு:
 
பேராசிரியர் பி.கோயா (கேரளா) – துணைத் தலைவர்
எம்.முஹம்மது அலி ஜின்னா(தமிழ் நாடு), இல்யாஸ் முஹம்மது தும்பே(கர்நாடகா) – செயலாளர்கள்
முஹம்மது ஷஹாபுத்தீன் – பொருளாளர்
 


தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:
 
இ.எம்.அப்துற்றஹ்மான், ஹாமித் முஹம்மது, பி.என்.முஹம்மது ரோஷன், எம்.அப்துல் ஸமத், அனீஷ் அஹ்மத், மவ்லானா உஸ்மான் பேக், எ.யா முஹ்யத்தீன், வழக்கறிஞர் எ.முஹம்மது யூசுஃப், எம்.முஹம்மது இஸ்மாயீல் ஆகியோர் ஆவார்.

Monday, December 24, 2012

கற்பழித்தால் பொது இடத்தில் தலை வெட்டு!

டெல்லியில் பேருந்தில் பல்கலைக்கழக மாணவியை கற்பழித்து ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த வழக்கில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் டெல்லியின் முக்கிய அரசு அலுவுலங்கள் முன்னாள் வரலாறு காணாத அளவுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்களால் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
 
குடியரசு தலைவர் மாளிகைக்கு முன்னால் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பு வேலிகளைத் தாண்டி குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். குடியரசு தலைவர் என்கிற பொம்மையின் மாளிகைக்குள் நுழைவதால் எந்த பயனும் இல்லை என்று.பாவம் மக்களுக்கு புரியவில்லை.
 
மக்கள் ஜனநாயக அடிப்படையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் நமது பயங்கரவாத போலீஸ்க்கு பொறுக்குமா! உடனே தண்ணீர் பீய்ச்சி அடித்தனர், கண்ணீர்ப் புகை, தடியடி பிரயோகம் என்று அராஜகத்தில் இறங்கினர். அதுமட்டுமல்லாது டெல்லியின் பல பகுதியில் நடந்த போராட்டத்திலும் இந்த போலீஸ் பொறுக்கிகள் தடியடி நடத்தி மக்களை கலைத்தனர். இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர்.
 
இந்நிலையில் கற்பழிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலை தேறிவருவதாகவும், அவர் செயற்கை சுவாசக் கருவியின்றி, தானாகவே சுவாசிக்கிறார் என்றும் தண்ணீரும், ஆப்பிள் பழரசமும் அருந்தினார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம் பூவை கசக்கி எறிந்தவர்களை அரபு நாடுகளில் மக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது போல் வெட்ட வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற கொடூர செயலில் ஈடுபட கொடியவர்கள் அஞ்சுவார்கள்.
*மலர் விழி*

Saturday, December 22, 2012

கருப்பு சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட முன்வர வேண்டும்!

மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பான NCHRO சார்பாக ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20/12/2012இல் சென்னையில் நடந்தது.
 
NCHROவின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப் கலந்தாய்வு கூட்டத்தின் துவக்க உரையை நிகழ்த்தினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் (PUHR) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கொடூரத்தன்மைக் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
 
வழக்கறிஞர் சத்ய சந்திரன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மனித உரிமை வழக்கறிஞர்கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பு (CRPP) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளை சார்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
கடந்த 2004-ஆம் ஆண்டு ’பொடா சட்டம்’ ரத்து செய்யப்பட்டவுடன் அதில் இருந்த கொடுமையான பிரிவுகள், சட்டத்திருத்தம் என்ற பெயரால் ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு 2008 இல் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது தேசத்தில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கி கொண்டு மத்திய அரசு 2-வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
 
தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களைப் பற்றி மக்களிடையே இருந்த விழிப்புணர்வு போன்று இந்த ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு இல்லை. தீவிரவாதம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களும், மாவோயிசம், நக்சலிசம் என்ற பெயரால் தலித் மற்றும் பழங்குடியின மக்களும் இந்த சட்டத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்படுகின்றன.
 
ஜனநாயகத்துக்கு எதிரான இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக போராடுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

Friday, December 21, 2012

மோடியின் வெற்றி மதசார்பின்மைக்கு கிடைத்த அடி!

                     குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்கு பதிவு எண்ணிக்கை 20.12.2012 காலை தொடங்கியது. இதில் பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் ஹிந்துத்துவா மோடி மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார். 

மோடி ஆட்சியை பிடித்திருப்பது மதசார்பின்மைக்கு கிடைத்திருக்கும் பெரிய அடி என்றே சொல்லலாம். ஹிந்துதுவாவுக்கு எதிரான மத சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், மற்றும் போலி கம்புனிஸ்ட்கள் போன்றோர்களின் உறுதியற்ற அரசியலின் விளைவாக பயங்கரவாதி மோடி மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறார்.

குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரத்தை முதல்வராக இருந்து கொண்டு இவரே திட்டமிட்டு நடத்தினார். இதில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், கூட்டம் கூட்டமாக முஸ்லிம் மக்கள் எரித்து கொலை செய்யப்பட்டனர். இதனாலேயே அமெரிக்கா மோடிக்கு விசா கொடுக்க மறுத்தது. இப்படிபட்ட உலகறிந்த ஹிட்லரை போன்ற பாசிச சிந்தனை கொண்ட ஒருவர் மீண்டும் முதல்வராகி இருப்பது மதசார்பின்மைக்கு கிடைத்திருக்கும் பெரிய தோல்வி என்றே சொல்லலாம்.

Monday, December 17, 2012

கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி கவிழ்கிறது!

காங்கிரஸ்,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை விட பா.ஜ.க மிகவும் ஆபத்தானது என்று சொல்லி அக்கட்சியில் இருந்து முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா விலகி தனி கட்சி தொடங்கிறார்.

அதில் இருந்து பாரதிய ஜனதாவின் சரிவு கர்நாடகாவில் தொடங்கியது. ""எடியூரப்பா தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா கட்சி, ஸ்ரீராமுலு தொடங்கியுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு பல பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள பாஜக அரசை நீக்க வேண்டும் என்று ஆளுநருக்கு கர்நாடகா மாநில எதிர் கட்சி தலைவர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ. க்கள் எடியூரப்பா கட்சிக்கும், 4 எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீராமுலு கட்சிக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக சட்டப் பேரவையில் பாஜகவின் பலம் 100 ஆகக் குறைந்துள்ளது.

சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை பாஜக இழந்துள்ளதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ன்படி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பாரதிய ஜனதா அரசைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பசுவதை தடுப்புச் சட்ட மசோதா, 11 தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!

சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜிந்தர் சௌத்ரிக்கு, ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (N I A ) தெரிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ஹரியாணா மாநிலம் பானிப்பட் அருகே செம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்பை சார்ந்த ராஜிந்தர் செளத்ரியை நேற்று சனிக்கிழமை இரவு தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்படும் 4ஆவது நபர் ராஜிந்தர் செளத்ரி. ஏற்கெனவே அசிமனந்தா, லோகேஷ் சர்மா, தேவிந்தர் குப்தா ஆகியோர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த ராஜிந்தர் செளத்ரி பற்றித் தகவல் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஹிந்துத்துவா தீவிரவாதியான அவர், தனது பெயரை மாற்றிக் கொண்டு மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனி அருகே தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும், வெடிகுண்டை சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தியது ராஜிந்தர் சௌத்ரி என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவில் நடந்த பல்வேறு மத கலவரங்களுக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் மூல காரணமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்  பயங்கரவாத முகம் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகிறது.

Saturday, December 15, 2012

தாயின் மனநிலையே சேயின் மனநிலை

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.

மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

Friday, December 14, 2012

கோத்ராவில் வளர்ச்சிக்கு அப்பால் முஸ்லிம்கள்!

கோத்ரா:குஜராத்தில் பாரபட்சமான வளர்ச்சியை காண விரும்பினால் நீங்கள் கோத்ராவிற்கு செல்லலாம். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரை பலிவாங்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதம் நிகழ்த்திக்காட்டிய இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைக்கு துவக்கம் குறித்த மண்ணில் வளர்ச்சியில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது.

சாலைகள் உடைந்து, கழிவு நீர் நிரம்பி, குடிநீர் கூட இல்லாத பகுதியாக இருந்தால் நீங்கள் உறுதியாக நம்பலாம்-அது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்று. கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு வளர்ச்சி என்பதே முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு எட்டவேயில்லை. மின்சாரம் மட்டுமே இங்குள்ள ஒரே ஆடம்பரம். தெருவிளக்கு, கழிப்பறை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள சாலைகள் உடைந்து சிதறிப்போய் கிடக்கின்றன. மழைக்காலங்களில் போக்குவரத்து முடங்கும். மாற்று சாலைக்கான கோரிக்கையும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

ஆனால், ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் நிலைமையே வேறு. நல்ல சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், அரசு திட்டங்கள் ஆகியவை அனைத்தும் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டுமே. 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு இங்கு முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித்தனியாக வாழ்கின்றார்கள். இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையான வாகா பார்டர் போல மூன்று பிரதேசங்கள் கோத்ரா நகரில் உள்ளன. முஸ்லிம் பகுதிக்கு அருகில் உள்ள ஹிந்து காலனியின் கேட் காலை ஆறரை மணிக்கு திறக்கும். இரவு எட்டரை மணிக்கு மூடப்படும். எல்லைகளில் இப்பொழுதும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோத்ரா ரெயில்வே நிலையத்திற்கு அருகே வாகனங்களை கூட முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித் தனியே 2 இடங்களில் பார்க் செய்கின்றனர். முஸ்லிம்கள் வாழும் போலன் பஜார், ஓல்ட் வெஜல்பூர் ரோடு, ஓஹ்வாட், கோண்டா, குயா ஆகியன ஹிந்துக்கள் வாழும் பகுதிகளை விட வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன. ஹிந்துக்கள் வாழும் பகுதிகளான கோத்ரா கிராமீயபகுதி, லுனாவாலா சாலை, தாஹோத் சாலை, பரோலி சாலை ஆகிய இடங்களில் பயணிக்கும் பொழுது மாற்றத்தை நேரடியாக காண முடியும். தார் போடப்பட்டு சீராக்கப்பட்ட சாலைகளும், அடிப்படை வசதிகளும் இப்பகுதிகளில் ஏராளம். அரசு திட்டங்களுடன், பா.ஜ.க எம்.பியின் வளர்ச்சி நிதியும் இப்பகுதிகளுக்கு மட்டுமே செலவிடப்படுகின்றன.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புதிய வீடுகளை கட்டவோ, கட்டிடங்களை கட்டவோ நகராட்சி அனுமதி வழங்குவதில்லை. அனுமதி கிடைக்க வேண்டுமென்றால் பல்வேறு அரசு அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும். ஆனால்,ஹிந்துக்கள் பகுதிகளில் கட்டிடங்களை கட்ட எவ்வித தடைகளும் இல்லை. விண்ணப்பித்தால் உடனே அனுமதி கிடைத்துவிடும். இனப்படுகொலையால் வாழ்விழந்த மக்களுக்கு வளர்ச்சியை கூட கண்ணில் காண்பிக்காமல் துரோகமிழைத்து வருகிறது மோடி அரசு.

Tuesday, December 11, 2012

காஸ்ஸா:ஹமாஸ் மாநாட்டில் ஒற்றுமை முழக்கம்!

காஸ்ஸா:ஃபலஸ்தீன் விடுதலை போராட்ட இயக்கமான ஹமாஸின் 25-வது ஆண்டு விழா பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும். 45 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைப் பிறகு பிறந்த நாட்டிற்கு ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் வருகை தந்தது ஃபலஸ்தீன் மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

அண்மையில் எட்டு தினங்களாக இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலால் தங்களுடைய போராட்ட வீரியம் சிறிதளவு கூட குறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் உள்பட ஐந்து லட்சம் பேர் காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தேசிய கீதத்தை பாடியும், ஃபலஸ்தீன் கொடியை வீசியும் இஸ்ரேல் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியும் வந்த மக்களை ஹமாஸ் ஸ்தாபக தலைவர் ஷேக் அஹ்மத் யாஸீன், அப்துல் அஜீஸ் ரன்தீஸி ஆகியோர் புன்சிரிக்கும் பிரம்மாண்ட புகைப்படத்தைக் கொண்ட மேடை வரவேற்றது.

ஹமாஸ் கமாண்டர்களின் கடுமையான பாதுகாப்பின் கண்காணிப்பில் மாநாட்டு நகரம் இருந்தது. காலித் மிஷ்அலும், இஸ்மாயீல் ஹானிய்யாவும் மேடைக்கு வந்தபொழுது உச்சபட்ச குரலில் மக்களின் தக்பீர் முழக்கம் வானை எட்டியது.

காலித் மிஷ்அலின் வருகையை யொட்டி காஸ்ஸாவிற்கு வந்த ஃபத்ஹ் இயக்கத்தின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டது சிறப்பாகும். ஐக்கிய ஃபலஸ்தீனுக்காக ஒன்றிணைந்து போராடுவோம் என்று காலித் மிஷ்அல் விடுத்த அழைப்பு ஃபலஸ்தீன் மக்கள் மிகவும் விரும்பிய வார்த்தைகளாகும்.

2006-ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக ஹமாஸின் மேடையில் ஃபத்ஹ் இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஒற்றுமையின் செய்தி இங்கிருந்து துவங்குகிறது என காலித் மிஷ்அல் அறிவித்த உடன் மக்கள் பலத்த கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர்.

ஒரே அரசு, ஒரே அதிபர், ஒரே பாராளுமன்றம்!- இதுதான் ஃபலஸ்தீனுக்கு தேவை என்று மிஷ்அல் கூறினார்.

மேலும் அவர் கூறியது: “இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம்! பிறந்த மண்ணின் விடுதலைக்கான போராட்டம் மரணம் வரை தொடரும். எங்களின் ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட நாங்கள் யாருக்கும் விட்டுத்தர மாட்டோம். புனித போரும், ஆயுத எதிர்ப்பு மட்டுமே எங்களது முன்னால் உள்ள ஒரே வழி. இஸ்ரேல் சிறைகளில் உள்ள அனைத்து ஃபலஸ்தீனர்களையும் விடுவிப்போம். இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க உதவிய ஈரானுக்கும், பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகித்த எகிப்தையும், துருக்கியையும் எங்களுக்கு ஆதரவளித்த சர்வதேச சமூகத்தையும் பாராட்டுகிறோம்.” இவ்வாறு காலித் மிஷ்அல் கூறினார்.

அணு உலையை இழுத்து மூடு! மாபெரும் ஆர்பாட்டம்!

கூடங்குளம் அணுஉலையை மூட சொல்லி இன்று மதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

 
கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு, போலீஸ் முற்றுகையைக் கைவிட்டு, பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இப்போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, பெண்கள் முன்னணி, தமிழ்நாடு மக்கள் கட்சிப், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தியாகி இம்மானுவேல் பேரவை, சேவ் தமிழ் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம், மா.பெ.பொ.க, தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், அமைப்புத் தோழர்களும் இதில் பங்கேற்றுக் கைதாயினர்

அணு உலையை இழுத்து மூடச்சொல்லி மீனவர்கள் போராட்டம்:
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடல் வழியாக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உவரி கூட்டப்புளி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று காலை 11 மணியளவில் சுமார் 500 படகுகளில் சென்று அணு உலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். கூடங்குளம் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்கி கொள்ள வேண்டும். போலீஸ் படையை இப்பகுதியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜெசுராஜ், முகிலன், மில்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிந்திக்கவும்: கூடன் குளம் அணு உலைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டத்தை கண்டும் காணாதது போல் நடிக்கும் சர்வாதிகாரி ஜெயாவும், மண்ணு மோகன் சிங்கிற்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அனைத்து இயக்கங்களும் ஒரே குரலில் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது வரவேற்க தகுந்தது. குறிப்பாக இப்போராட்டத்தில் மீனவர்களின் உயிர் தியாகங்களும் வீரியமான போராட்டமும் மிக முக்கியமானது அணு உலையை இழுத்து மூட மக்கள் இன்னும் வீரியமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு போபால், புகுஷிமா நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

Saturday, December 8, 2012

வால்மார்ட் வேண்டாம்!


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் தீர்மானத்தை பாராளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று கோரி SDPI கட்சி தர்ணா போராட்டத்தை நடத்தியது.
 
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டில் 30 சதவீத சில்லறை வியாபாரிகள் நடுவழியில் நிறுத்தப்படுவார்கள் என்று SDPI (சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா) கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.
 
நாட்டில் சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை அரசு வாபஸ் பெறவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
சிந்திக்கவும்: வால்மார்ட் விசயத்தில் BJP மவுன சாமியார் ஆனது, போலி கம்புனிஸ்ட்களும், கருணாநிதி மற்றும் கட்சிகளும், காங்கரஸின் காலை கட்டியாக பிடித்து கொண்டன. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது அபாயகரமானது. இதனால், நமது ஊர்களில் வீதி தோறும் பெட்டிக்கடை வைத்து பிழைக்கும், பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்?!

இந்தியாவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை கொண்டு வந்தே தீருவேன் என்று அந்நிய அடிமை மன்மோகன் சிங் திட்டங்களை வடிவமைக்கிறார். இவர் படித்த படிப்பும், மேதாவித்தனங்களும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரங்களை அழித்து பணக்காரர்களின் கைகளில் இந்தியாவை கொண்டு ஒப்படைக்கும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.

Tuesday, November 27, 2012

அமெரிக்காவின் அத்துமீறல்: ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு

தெஹ்ரான்:சர்வதேச சட்ட திட்டங்களுக்கு எதிராக நடப்பதாகவும், கடற்பகுதிகளில் அத்துமீறி நுழைவதாகவும் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனுக்கு ஐ.நாவுக்கான ஈரான் தூதர் முகமது கஸாயி கடிதம் எழுதி உள்ளார்.இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்க கடற்படையினர் ஈரான் நாட்டின் வான்பகுதியில் அத்து மீறி நுழைகின்றனர்.

கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புஷ்ஹெர் நகரின் வான்பகுதியில் அக்டோபர் மாதம் 7 முறையும், நவம்பர் மாதம் ஒரு முறையும் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறியுள்ளனர்.சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா நடந்து வருகிறது. இந்நடவடிக்கையினால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படின் அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கையை ஐநா கண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரையிலும் ஈரானின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

Friday, November 23, 2012

கசாபுக்கு தூக்குதண்டனை சரியா? தவறா?

போபால் விசவாய்வு கசிவில் பல்லாயிர கணக்கான மக்களை கொன்ற அமெரிக்கர் அன்டர்சன் சுகமாக வழியனுப்பி வைக்கப்பட்டார். கசாபுக்கு அவசர அவசரமாக தூக்கு!

மனசாட்சி இல்லாத அரசியல்வாதி: கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. கசாப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவை அழிக்க நினைத்தவன் கொல்லப்பட்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன். இந்த தண்டனை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றி இருக்கப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றி இருந்தால் நமது நாட்டில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு அது பாடமாக அமையும் என அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

மனசாட்சி உள்ள அரசியல்வாதி: அஜ்மல் கஸாபின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மரணத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட24 மணி நேரத்திற்குள் கஸாபை தூக்கிலிட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: ஒரு மனிதனை கொல்வதை பார்த்து மகிழ்கிறேன் என்று ஒரு காந்தியவாதி சொல்கிறார். காந்தி அஹிம்சையை போதித்தவர். சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்டு பொசுக்கும் போதும் அகிம்சை வழியில் போராடியவர். அவர் வழியில் வந்த காந்தியவாதி அன்னா ஹசாரேக்கு ஏன் இந்த கொலைவெறி? இப்படி இவரை பேசத்தூண்டுவது எது? யார்?

பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்க படவேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதேநேரம் இதைப்போல் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை மதக்கலவரங்கள் மூலம் கொன்ற மோடி, அத்வானி போன்றோருக்கு பொது இடத்தில் தூக்கு கொடுக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே வேண்டுகொள் விடுப்பாரா? இப்படி இவரை பேச தூண்டாதது எது?

கசாபின் தூக்கை எதிர்த்து கருத்து சொல்ல பெரும்பான்மையான அரசியல்வாதிளுக்கு தைரியம் இல்லை. அப்படி கருத்து சொன்னால் தேசபக்தி என்கிற முகமூடி தரித்த பார்பன ஊடகங்களும், பார்பன அரசியல் ஆதிக்க சக்திகளும், ஹிந்துத்துவாவை உருவாக்கி அதன் தலைமை பீடங்களை அலங்கரிக்கும் அவாள்களும் தங்கள் மீது பாய்வார்கள். இதன் மூலம் தங்களை தேசதுரோகி என்று பட்டம் கெட்டுவர் என்கிற பயமே. இது போன்ற தருணங்களில் தைரியமாக கருத்து சொல்லும் வைகோ போன்றவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அது
கடுகளவு கூட இந்தியாவில் இல்லை.
 *மலர் விழி*

Monday, November 19, 2012

உதவாக்கரை இந்திய ராணுவத்தை தூக்கி பிடிக்கும் துப்பாக்கி!

உதவாக்கரை இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கும், அவர்களை தூக்கி பிடிக்கும் ஒருபடமே துப்பாக்கி.

தமிழக மீனவர்கள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். எங்கே மாயமாய் மறைந்து போனது இந்திய ராணுவம், இதையெல்லாம் படமாக எடுப்பார்களா?

இந்திய ராணுவம் ஈழத்த்து பெண்களையும், காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து கொன்ற வரலாற்றை படமெடுக்கும் தைரியம் தாணுவுக்கு உண்டா? அதை டைரெக்சன் செய்யும் வல்லமைதான் முருகதாசுக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்கத்தான் நமது காமடி பீஸ் விஜய் சம்மதிப்பாரா?

நீங்கள் ஹீரோக்கள் ஆகவேண்டும், அரசியலில் நுழைய வேண்டும், கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் உணமைகளை மறைத்து, வரலாறுகளை திரித்து எடுக்கப்படும் படங்களில் கூச்சம் இன்றி நடிப்பீர்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்க போறேன் பேர்வழி என்று படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார் வெத்து வெட்டு விஜயகாந்து.

ஆக்சன் கிங் அர்ஜூன் இவர் தீவிர ஹிந்துத்துவா ஆதரவாளர். இவர் படங்களில் பெரும்பான்மையில் இசுலாமிய தீவிரவாதிகள் வந்துவிடுவார்கள். அதுசரி இந்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை பற்றி ஒருபடமும் எடுக்கப்படவில்லையே. சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்பு முதல் மலேகன் குடுவேடிப்பு வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இந்திரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்கள் கம்பி எண்ணுகிறார்கள்.

உண்மை இப்படி இருக்க இசுலாமிய தீவிரவாதிகள் குண்டுவைப்பதாக படம் எடுக்க இவர்களை தூண்டுவது எது? இதற்க்கு சூத்தரதாரியாக இருந்து செயல்படுபவர்கள் யார்? நடந்து முடிந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது தெளிவான இச்சூழலில் இதை மறைக்க சித்தாந்த ரீதியான  ஒரு யுத்தத்தை RSS நடத்தி வருகின்றது. RSSசின் பின்புலத்தில் செயல்படும் சில கலைத்துறையினர் இது போன்ற படங்களை இயக்கி வருகின்றனர்.

எந்த மதத்தினரும், பாதிக்கப்பட்ட, உரிமைக்காக போராடும் எவரும் தீவிரவாதிகள் இல்லை. தீவிரவாதத்தின் ஆணிவேர் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவதும், ஆட்சியாளர்கள் சொந்த மக்களுக்கே அநீதி செய்வதாலுமே ஏற்ப்படுகின்றது. மற்றபடி துப்பாக்கி ஒரு சாதாரண மசாலா துக்கடா படமே. இதற்காக முசுலிம் நண்பர்கள் கலைதுறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது காட்சிகளை நீக்க சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு இலவச விளம்பரமாக அமையும் என்பதே எனது மேலானா கருத்து.

கடந்த முறை ஏழாம் அறிவை கொடுத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த முருகதாஸ் இந்தமுறை துப்பாக்கிக்கு இரையாகி போனார்.

*மலர் விழி*

Friday, November 16, 2012

BJP & RSS ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளே!

பாரதிய ஜனதா ஒரு அரசியல் கட்சி என்றே பலராலும் நம்பப்பட்டு வருகிறது. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமூடி என்ற கருத்து எழுப்பப்படும் பொழுதெல்லாம் அதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக மறுத்தே வந்துள்ளது.
 
மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது எங்களுக்கு மரியாதை உண்டு, ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்க வேண்டும் என்று எங்களுக்கு கட்டாயமில்லை, அவர்களும் எங்களை நிர்பந்திக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியினர் பகல் வேஷம் போட்டு வந்தனர்.
 
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் உழல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்றதும் அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பொழுது நிதின் கட்கரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் விவகாரத்தில் அவர் உயர்ஜாதி என்பதால் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகின்றது.
 
இந்நிலையில் நிதின் கட்கரிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுளை விசாரிக்கும் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான குருமூர்த்தியிடம் ஒப்படைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி விவகாரத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். எப்படி தலையிட முடியும்? அதுவும் கட்சியின் அகில இந்திய தலைவர் மீது விசாரணை நடத்தும் அதிகாரம் இவர்கள் கைகளுக்கு எப்படி போனது?
 

இதில் இருந்து ஒன்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் அரசியல் முகமூடியே!  இதை வெளிப்படியாக காட்டி கொள்ளாத பாரதிய ஜனதா, முஸ்லிம் லீக் போல் நாங்களும் ஒரு கட்சி என்று சொல்லி இந்து மக்களின் ஓட்டை நயவஞ்சகமாக பெற்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை நிற்கிறது. பாரதிய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் வேறல்ல! இவைகள் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளே!.

Saturday, November 10, 2012

கோலாகலமாக நடக்கும் 31-வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி!

ஷார்ஜா:ஷார்ஜாவில் 31-வது புத்தகக் கண்காட்சி நவம்பர் 7-ம் தேதி துவங்கியது. ஷார்ஜா ஷேக் ஸுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி இந்தக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பல நாடுகளின் பதிப்பகங்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் இந்திய பதிப்பகங்கள் அதிக ஸ்டால்களைப் போட்டுள்ளதால் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியுள்ளது.

ஷார்ஜாவின் கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகம் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 7 முதல் 17-வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 பதிப்பகங்கள் பங்குபெற்றுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் முதல் 26 வரை நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் 42 நாடுகளிலிருந்து 720 பதிப்பகங்கள் கலந்து கொண்டன. ஆனால் இந்த முறை 20 நாடுகளும், 204 பதிப்பகங்களும் அதிகபடுத்தபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அல் தாவூன் மாலுக்கு அருகிலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வைத்து நடைபெறும் இந்தக் கண்காட்சியில் மொத்தம் 40,000 பார்வையாளர்களும், 10,000 மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு நூற்களின் விலையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும்.
வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும்.

பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.

எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார்.

கடந்த 9-ம் தேதி வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வமாகப் புத்தகங்களை வாங்கினர். அரபுலகின் பிரசித்தி பெற்ற தாருஸ்ஸலாம் பதிப்பகத்தின் ஸ்டாலில் நல்ல பல ஆங்கில, அரபி நூற்கள் உள்ளன. மலையாள பதிப்பகங்கள் அதிகமாகப் பங்கெடுத்துள்ளதால் இந்தியன் பெவிலியனில் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தியன் பெவிலியனில் ஹால் எண்:5-ல், ஸ்டால் எண்:7-லுள்ள மலையாளப் பதிப்பகமான தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் தமிழ் பதிப்பகமான இலக்கியச்சோலையின் தமிழ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படையில் நேர நிர்வாகம் குறித்து முதன்முதலில் தமிழில் வெளிவந்துள்ள நூலான “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” மற்றும் “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “கோவை:போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம்”. “மனதோடு மனதாய்”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்”, “இப்பி பக்கீர்” முதலான இலக்கியச்சோலை பதிப்பகத்தின் தமிழ் நூல்கள் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இலக்கியச்சோலை பதிப்பகத்தின் காப்பாளர் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் அப்பதிபகத்தின் ஸ்டாலை பார்வையிட்டார். தங்களது வெளீயீடுகள் பற்றியும், இப்பொழுது தயாராகி கொண்டிருக்கும் புதிய புத்தகங்கள் பற்றியும் அங்கிருந்த பார்வையாளர்களுடன் உரையாடினார்.

நமது தூது நிருபர்களுடன் ஒருசில நிமிடங்கள் கலந்துரையாடினார். அதில் இலக்கியச்சோலை பதிப்பகம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு “இலக்கியச்சோலை என்பது தமிழ் கூறும் நல் உலகின் வாசகர்களுக்கு ஒரு விடியல். மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறுகளை தோண்டியெடுப்பதும், சத்தியத்திற்காய் உழைத்த மாவீரர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படை அம்சங்கள், உண்மையின் பிம்பங்களை உலகிற்கு உரைப்பது தான் இலக்கியச்சோலை என்றார்.

இம்மாபெரும் கண்காட்சியில் பங்குபெறும் ஒரே தமிழ்பதிப்பகம் இலக்கியச்சோலை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 9, 2012

பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!

பழைய ஹைதராபாத் நகரில் உள்ள முஸ்லிம்களின் வரலாற்று சின்னமான 400 ஆண்டு பழமையான "சார்மினார்" வளாகத்தை ஆக்கிரமித்து அதில் கோவில் கட்ட ஹிந்துதுவாவினருக்கு உதவியாக இருந்தனர் காவல்துறை காவிகள்.

இதற்க்கு உடந்தையாக இருந்தவர்கள் சாதாரண காவலர்கள் இல்லை, 33 போலீஸ் உயர் அதிகாரிகள். ஹைதராபாத் பகுதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத ஒரு போர் நடத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் திருநாளின் போது "குர்பானி" கொடுக்கும் பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்.,விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு பங்குண்டு.

இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது இதுவெல்லாம் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சார்மினாரை பாதுகாக்க ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்பு கோவில்" கட்டுமானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். .

சிந்திக்கவும்: குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் வழிபாட்டு தளங்களை ஹிந்துத்துவா குறிவைத்து தாக்குவதும், அதை உரிமை கொண்டாடுவதும் பாபரி மஸ்ஜித் தொடங்கி காசி, மதுரா, இப்போது குதுமினார் வரை நீள்கிறது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நமது முன்னோர்கள் கோவிலுக்கு அருகாமையில் மசூதிகளும், மசூதிகளுக்கு அருகாமையில் கோவில்களையும் கட்டி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இவர்கள் வீட்டு திருமண வைபவங்களில் அவர்கள் கலந்து கொள்வதும், தீபாவளிக்கு, பொங்கலுக்கு முஸ்லிம்கள் சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக உணவு பண்டங்களை தயாரித்ததும் சாமிக்கு படைப்பதற்கு முன் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் நமது இந்து பெருந்தகை மக்கள்.

பதிலுக்கு முஸ்லிம்கள் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகைகளில், விருந்துகளில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருந்தாலும் இந்து பெருமக்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு என்று தனியா ஆட்டிறைச்சி சமைத்து அவர்களை உபசரிப்பதும், சைவம் சாப்பிடும் இந்துக்களுக்காக தனியாக சைவ உணவு படைப்பதுமாக ஒருவருக்கொருவர் கொஞ்சி குலாவி மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ஒருவரது நம்பிக்கையை மற்றவர்கள் அவமதிக்காது மதிபளித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் இயக்கங்கள் இந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டார்கள். மதத்தை வைத்து அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்கும் இவர்களது மலிவான யுக்திக்கு பலியாவது என்னவோ அப்பாவி மக்களே. மதத்தை வைத்து அரசியல், மதத்தை வைத்து வியாபாரம் என்று கிளம்பிய இந்த கூட்டத்தால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.

சார்மினார் Sultan Muhammad Quli Qutb Shah மன்னரால் 1591 ல் கட்டப்பட்டது.

Tuesday, November 6, 2012

நீயா! நானா! ஜெயிக்க போவது யாரு?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. அமெரிக்காவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். ஒருவர் அதிபராக 2 முறை பதவி வகிக்கலாம்.
 
அமெரிக்காவில் மொத்தம் இரண்டே கட்சிகள்தான் ஒன்று குடியரசு கட்சி, மற்றொன்று ஜனநாயக கட்சி. ஜனநாயக கட்சி சார்பில் 2வது முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார்.
 
அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளது. அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்க அரசியல் நிர்ணய சபை என்று ஒன்று உள்ளது. அந்த சபையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 538 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார். அந்த சபைக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவு நாளை நடக்கிறது. இதில் வெற்றி பெறும் பிரதிநிதிகள் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். மொத்தம் உள்ள 538 இடங்களில், 270 பிரதிநிதிகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவரே அதிபராவார்.
 
இந்நிலையில், அனல் பறக்கும் பிரசாரம் நேற்று இரவு முடிந்த நிலையில், 50 மாகாணங்களில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக  தற்போதைய அதிபர் ஒபாமாவும் எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும்  சூறாவளி பிரசாரம் செய்தனர். எனினும், இருவருக்கும் சம பலத்துடன் இருப்பதாக கருத்து கணிப்புகள் தகவல்  வெளியாகி உள்ளது. சில மாநிலங்களில் ஒபாமாவுக்கும் சில மாநிலங்களில் மிட் ரோம்னிக்கு ஆதரவு அமோகமாக உள்ளது. எனினும், வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் மாநிலமாக ஓஹியோ அமைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சிந்திக்கவும்: அமெரிக்காவை ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாள் என்ன? எங்களுக்கு அதை பற்றி கவலையில்லை என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சும்மா ஒரு செய்திக்காக சொல்லி வைத்தேன் ஐயா. அது சரி நமக்கு நிச்சயமா கவலையில்லை ஆனால் நம்ம மண்ணு மோகன் சிங்கு வகைரா எதிர்பார்த்து காத்து கிடக்கிறதே!

Monday, November 5, 2012

நீதிக்கான முழக்கம் - மண்டல மாநாடு : சென்னையில் திரண்ட மக்கள் வெள்ளம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு மற்றும் பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் ‘குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம்’ ‘நீதிக்கான முழக்கம்’ என்ற கோஷத்தோடு சென்னை மண்டல மாநாடு 4.11.2012 அன்று வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரில் காயிதேமில்லத் திடலில் வைத்து நடைபெற்றது.

இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் , மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல் , எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் S.M. ரஃபீக் அஹமது , ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானிஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் K.S.M. இப்றாஹீம்


காலை 10 மணிக்கு மாநாட்டு திடலில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மாலை 5.00 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் மாநாடு துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில பொருளாளர் K.S.M. இப்றாஹீம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி தலைமையுரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறுவதை ஆதிக்க சக்திகள் ஒருபோதும் விரும்பியதில்லை என்பதே வரலாறு நமக்குப் பகரும் சாட்சியாகும். நமது நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித் மற்றும் முஸ்லிம்களை முன்னேற்ற அரசும் பயனுள்ள முயற்சிகளை எடுப்பதில்லை. இந்த சமூகங்களை முன்னேற்ற பாடுபடக்கூடிய கட்சி மற்றும் இயக்கங்களையும் நசுக்குவதில் குறியாக உள்ளது. அந்த வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு பல நெருக்கடிகளை அரசு மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள். நமது இந்திய ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு சிறிதளவும் மாறுபடாத வகையில் செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். இத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கு தலித் சமுதாயம் துணை நிற்க தயாராக உள்ளது என்பதை இம்மாநாட்டில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் தொல். திருமாவளவன்


பின்னர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானி அவர்கள் தனது உரையில், உளவுத்துறையிலும் காவல்துறையிலும் உள்ள அதிகாரிகள் ஒருசார்பு நிலையில்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் டி.இப்ராஹீம் உஸ்மானி



SDPI மாநில பொதுச் செயலாளர் S.M. ரஃபீக் அஹமது அவர்கள் பேசும் போது, “முஸ்லிம்கள் சுரண்டலுக்கு எதிராகவும், அநீதிக்கு எதிராகவும் போராடுபவர்கள். இந்த போராட்டத்தில் நிச்சயம் முஸ்லிம்களே வெற்றி பெறுவார்கள்“ என்று கூறினார்.

அடுத்து பேசிய பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல் தனது உரையில், “அரசியல் சாசன சட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். முன்னோர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவுகூரும் முகமாகவும் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தினோம். UAPA போன்ற கருப்புச் சட்டங்களால் அநியாயமாக கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்படும் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறோம். இதுமட்டுமின்றி கல்வி, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் முன்னேற்றத்தை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ஃப்ரண்டை குறி வைக்கின்றனர். பல்வேறு அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். ஒடுக்கப்பட்டோர் சக்தியடைவதற்கெதிரான சதிகளை முறியடிக்க தொடர்ந்து நாங்கள் போராடுவோம்” என்று கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A.S. இஸ்மாயீல்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது உரையில், “தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மறு உருவமே பாப்புலர் ஃப்ரண்ட் என்று சில வகுப்புவாத சிந்தனையுடைய அதிகாரிகள் சித்தரித்து வருகின்றனர். ஆனால் 2001ம் ஆண்டு சிமியை தடை செய்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 1989ல் இருந்தே பாப்புலர் ஃப்ரண்ட் சமூகப் பணிகளை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் மு. முஹம்மது அலி ஜின்னா


இறுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் S. சஃபியுல்லாஹ் இருவரும் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தனர். நிறைவாக பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் E. ஷாஹித் முஹம்மது நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. இம்மாநாட்டில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Saturday, November 3, 2012

அநியாமாக உடைத்து நொறுக்கப்பட்ட முஸ்லிம் கடைகள்: காவி பயங்கரவாதிகள் அட்டூழியம்

ஹைதராபாத்:ஹைதராபாத்தை அடுத்த தப்பசபூத்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்ஸி மண்டி பகுதியில், நேற்று மாலை முஸ்லிம்களின் கடைகள் “தீ” வைத்து கொளுத்தப்பட்டன. கடந்த 10 தினங்களாகவே குர்பானிக்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்தும், சிறு சிறு சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்தனர் காவி பயங்கரவாதிகள், பக்ரீத் பெருநாள் முடிந்த பிறகும், கடந்த 28-ம் தேதி அன்று சப்ஸிமண்டி பகுதி யில் உள்ள “தர்கா”வை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்,
இதற்கிடையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி நேற்று ஒரு கும்பல், முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தது.

கலவரக்காரர்கள் “கன்னடம்” மற்றும் “மராட்டிய” மொழிகளில் குரல் கொடுத்த வண்ணம் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் மக்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர், நிலைமையின் கடுமையை உணர்ந்த, மேற்கு மண்டல டி.ஸி.பி., ஸ்டீபன் ரவீந்தர், ஏ.ஸி.பி.டி., ஸ்ரீனிவாஸ், ஆகியோர் தலைமையில், ஏ.ஸி.பி.டி., நாகராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிரண்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்,

காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. என்றாலும், கலவரம் பரவாமல் தடுக்க நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னடம் மற்றும் மராட்டிய மொழி பேசக்கூடிய கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களை யார் அழைத்து வந்தனர்? போன்ற கேள்விகளுக்கு, பதில் தெரியாமல் முஸ்லிம்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Thursday, November 1, 2012

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம் – மத்திய அமைச்சர் ரஹ்மான் கான்!

புதுடெல்லி:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களை தழுவிய தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று ரஹ்மான் கான் பி.டி.ஐ செய்தி ஏஜன்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியது: “இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே நிவாரணம் அல்ல. இருப்பினும் அது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையாகும். 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு அரசு தரப்பின் சட்ட நடைமுறை வீழ்ச்சிகளை பிரதிபலிக்கிறது.

நீதிமன்ற தீர்ப்பு உள் ஒதுக்கீட்டை நிராகரிக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்கள் யார்? என்பதை தீர்மானிக்கும் அளவுகோல் திருப்தி அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரிவான ஆய்வின் அடிப்படையிலேயே கர்நாடகா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தெரிவுச் செய்யப்பட்டனர். இதனடிப்படையில்தான் கர்நாடகா மாநிலத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான உச்சநீதிமன்றம் மற்றும் ஆந்திரமாநில உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு காரணமானது சில சட்ட நடைமுறை தவறுகளாகும்.

எனது அமைச்சகம், இரண்டு தீர்ப்புகள் குறித்தும், நாட்டின் சமூக-பொருளாதார பிற்படுத்தப்பட்ட நிலைமைக் குறித்து  அறிவியல் பூர்வமாக ஆராயும். இந்தியாவில் வக்ஃப் போர்டுகளின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவர குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடரில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்.” இவ்வாறு ரஹ்மான் கான்  கூறினார்.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முஸ்லிம்களை தொடர்ந்து வெறுப்பேற்றி வரும் இடஒதுக்கீடு குறித்த வெற்று வாக்குறுதிகளின் பட்டியலில் புதிதாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள ரஹ்மான் கானின் பேட்டியும் இடம் பிடிக்குமா? என்பது அவரது தொடர் நடவடிக்கைகளை பொறுத்தே அமையும்.

Tuesday, October 30, 2012

ரிஹாப் மூலம் 25 ஆயிரம் குடும்பத்தினருக்கு குர்பானி இறைச்சி விநியோகம்!

புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்தது குர்பானி இறைச்சி. தேச முழுவதும் ஈதுல் அழ்ஹா என்று அழைக்கப்படும் தியாகத்திருநாளில் குர்பானி கொடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இறைச்சிகள் அடங்கிய பொட்டலங்களை ரிஹாப் இந்தியா பவுண்டேசன் விநியோகித்தது.

அஸ்ஸாம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்போர் உள்பட மேற்கு வங்காளம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 25 ஆயிரம் குடும்பத்தினருக்கும் தியாகப்பெருநாளில் அறுக்கப்பட்ட குர்பானி இறைச்சிப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக ரிஹாப் பவுண்டேசனின் பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக 2-வது வருடமாக ரிஹாப் , தியாகப்பெருநாளில் அறுக்கப்படும் குர்பானி இறைச்சியை விநியோகித்துள்ளது. இத்திட்டத்திற்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் பொட்டலங்களை உரிய நேரத்தில் விநியோகித்த தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு ரிஹாப் இந்தியா பவுண்டேசன் தலைவர் இ.அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு KIFF நடத்திய விளையாட்டு நிகழ்ச்சி

குவைத் நகரம்:ஹஜ் பெருநாளை முன்னிட்டு குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வரும் குவைத் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) சார்பாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெருநாள் தினத்தன்று மதியம் சரியாக 2 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வில் கால்பந்தாட்டம், கபடி, கைப்பந்து போட்டி, பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகள் எனப் பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இறுதியாக முதலிடம் பிடித்தவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.  அப்பாஸியா, பர்வனியா, பாஹீல், சிட்டி ஆகிய நான்கு அணிகள் கபடி, கைப்பந்து, கயிறு இழுத்தல் போட்டிகளில் கலந்து கொண்டன.

சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற போட்டிகளின் இறுதியில் அப்பாஸியா அணி பட்டத்தைத் தட்டிச் சென்றது, இரண்டாம் இடத்தை சிட்டி அணி கைப்பற்றியது. போட்டியில் வென்றவர்களுக்கு இறுதியில் KIFF-ன் தலைவர் சகோ. அப்துல் சலாம் அவர்கள் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கி கவுரவித்தார்.

மொத்த நிகழ்ச்சியையும் சகோ. ஷிஹாப் அவர்கள் தொகுத்து வழங்கினார். KIFF-ன் தன்னார்வத் தொண்டர்கள் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Sunday, October 28, 2012

இந்தியா முழுவதும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்

புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர். அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன் அருமை மகனையே இறைவனின் கட்டளைக்கேற்ப அறுத்துப் பலியிட முன்வந்த இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக ஆடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும் அறுத்துப் பலியிட்டனர்.

பக்ரீத் என்றழைக்கப்படும் இந்தத் திருநாளில் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனை புரிந்தனர்.

பழைய டெல்லியில் பாரம்பரியமிக்க உணவுகளான கபாப், பிரியாணி, நிஹாரி, கொர்மா ஆகிய உணவுகளுடன் பெருநாள் களை கட்டியது. அங்குள்ள தெருக்களிலும், சந்துகளிலும் இவை தயாரிக்கப்பட்ட மணம் எங்கும் பரவி நின்றது.

துப்ரி மாவட்டம், அஸ்ஸாம்:
கடந்த புதன்கிழமை இந்த மாவட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலினால் பதட்டம் நிலவியது. இதனால் பலத்த பாதுகாப்புக்கிடையில் பெருநாள் தொழுகைகளை முஸ்லிம்கள் நிறைவேற்றினர்.

லக்னோ, உ.பி:
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஃபைஸாபாத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையில் ஈத் தொழுகைகள் நிறைவேற்றப்பட்டன.

ஜம்மு கஷ்மீர்:
ஜம்மு கஷ்மீரில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் பெருநாள் தினம் அமைதியாகக் கழிந்தது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்திலும், ஏரலிலும் குர்பானீக்காக வந்த ஒட்டகங்கள் அனைவரையும் கவர்ந்தன.

Friday, October 26, 2012

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2012: இலக்கியச்சோலை தமிழ் நூல்கள் பங்கேற்பு!

ஷார்ஜா:2012ம் ஆண்டிற்கான 31வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி நவம்பர் 07 முதல் 17 வரை நடைபெறவிருக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 நூல் வெளியீட்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதில் இலக்கியச் சோலை பதிப்பகத்தின் தமிழ் நூல்களும் இடம் பெறுகின்றன.
40 அரபு நாடுகளிலிருந்தும், 22 வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 924 பதிப்பகத்தார்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர் என்றும், இதில் 24 நாடுகள் முதன் முறையாகப் பங்கேற்கின்றன என்றும் கலாச்சாரம், தகவல் துறை அறிவித்துள்ளது.

இந்த வருடம் பாகிஸ்தான் மையப்படுத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானிலிருந்து மொத்தம் 23 வெளியீட்டு நிறுவனங்கள் இதில கலந்து கொள்ளும். இதில் 20 பாகிஸ்தான் பதிப்பகத்தார் முதன் முறையாகக் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் நாடுகளின் பங்களிப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியிருக்கிறது. சென்ற வருடம் 35 நாடுகளிலிருந்து 894 பதிப்பகத்தார் கண்காட்சியில் கலந்து கொண்டனர். இதில் 14 அரபு நாடுகளும், 21 வெளிநாடுகளும் அடங்கும்.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியின் பொது இயக்குனர் அஹமத் அல் அம்ரி பத்திரிகையாளர் சந்திப்பில் முதன் முதலாக இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் நாடுகளின் பெயர்களை வெளியிட்டார். ஸ்பெயின், ஆஸ்திரேலியா, இத்தாலி, போலந்து, தாய்லாந்து, ரொமானியா, செர்பியா, சீனா, கனடா, நைஜீரியா, கிரீஸ் ஆகிய நாடுகள் அந்தப் பட்டியலில் அடங்கும்.
இந்த வருடம் அரபு பதிப்பகத்தாரின் பரப்பளவு 7600 சதுர மீட்டரிலிருந்து 9613 சதுர மீட்டர் அதிகமாகியுள்ளது. அதேபோல் வெளிநாட்டுப் பதிப்பகத்தாரின் பரப்பளவு 1600 சதுர மீட்டரிலிருந்து 2100 சதுர மீட்டர் அதிகமாகியுள்ளது. இந்திய பதிப்பகத்தாரின் பங்கேற்பு சென்ற வருடத்தை விட 500 சதவீதம் அதிகரித்துள்ளது.

வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும்.

பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.

எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார்.

இந்த வருட கலாச்சார சாதனையாளர் விருதும் இக்கண்காட்சியில் வழங்கப்படும். இவ்வருடம் அந்த விருதை அமீரகக் கவிஞரும், எழுத்தாளருமான ஹபீப் அல் ஸாயிக் பெறவிருக்கிறார். மேலும் அமீரகப் பதிப்பகத்தாருக்கும், சிறந்த நூற்களுக்கும், சிறப்பாக அச்சடிக்கப்பட்ட நூலுக்கும், பொருளாதாரம் குறித்த சிறந்த வெளிநாட்டுப் புத்தகத்துக்கும் ஷார்ஜா விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. சிறந்த அரபு குழந்தை இலக்கியத்திற்கான எத்திஸலாத் விருதும் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் அனைத்தும் கண்காட்சியின் முதல் நாள் நடக்கும் துவக்க விழாவில் வழங்கப்படும்.

கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் கலாச்சாரம், தகவல் துறை பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து தயாரித்திருக்கும் 200 குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சென்ற வருடம் இக்கண்காட்சியில் கலந்துகொண்டவர்களில் 25 சதவீதம் பேர் இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த வருடம் அது 35-40 சதவீதமாக அதிகரிக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ரவி கூறினார். இந்திய பதிப்பகத்தாரின் எண்ணிக்கையும் சென்ற வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காகியிருக்கிறது என்றும், தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust) இந்த வருடம் கலந்துகொள்வது முக்கிய அம்சம் என்றும் மேலும் அவர் கூறினார்.

இந்த 11 நாள் கண்காட்சி உலகிலேயே ஆறாவது மிகப் பெரிய இலக்கியத் திருவிழா என்றும், இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமே இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுதான் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

இக்கண்காட்சியில் ஒரே ஒரு தமிழ் பதிப்பகத்தின் நூல்கள் மட்டுமே இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவை இலக்கியச்சோலையின் தமிழ் நூல்கள். தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் என்ற மலையாளப் பதிப்பகத்தாரின் ஸ்டாலில் இலக்கியச் சோலையின் தமிழ் நூல்கள் கிடைக்கும்