Sunday, July 31, 2011

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சந்தோசப்படும் அர்ச்சகர்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தனியார் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்ப தாகவும். இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என்றும் கடந்த 7ம் தேதி போனில் மிரட்டல் வந்தது.

போனில் பேசிய மர்ம ஆசாமி இந்த விவரத்தை கூறி விட்டு திடீரென இணைப்பை துண்டித்து விட்டார்.  இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார் செய்தனர்.  புகாரின்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

இதையடுத்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சம் பந்தப்பட்ட மிரட்டல் போன் எங் கிருந்து வந்தது? என கண்டுபிடிக்க முயற்சித்தனர். இதில், திருவாரூர் சாட்டைக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணி யாற்றும் ராமநாதன் (28) என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கல்லூரிக்கு போன் செய்தவர் என தெரியவந்தது. 

இதையடுத்து அர்ச்சகர் ராமநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, அதனால் பிறர்படும் அவதியை கண்டு ரசிப்பது தனது பொழுதுபோக்கு என்று அர்ச்சகர் ராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களிடமும் ஆபாசமாக போனில் பேசும் வழக்கம் உடையவர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மஸ்ஜித்தை சுத்தம் செய்யும் பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்

கர்நாடக மாநிலம்  பாப்புலர் ஃப்ரண்டின் புத்தூர் கிளை சார்பாக மாவட்டம் முழுவதும் இறை இல்லத்தை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 ஆண்டிற்கு மேலாக பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  இஸ்லாமியர்களின் புனித மாதமாம ரமழான் நெருங்கும் வேலையில் மாவட்டம் முழுவதும் உள்ள 40ற்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகளை சுத்தம் செய்யும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புத்தூர் கிளை சகோதரர்கள் மேற்கொண்டனர்.


புத்தூர் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறது. குறிப்பாக இரத்தான முகாம், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டம், சமூக மேம்பாடு போன்ற் எண்ணற்ற சேவைகளை செய்து மக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பை பெற்று வருகிறது.

வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாளில் "வாருங்கள் சுதந்திரத்தின் காவலாளிகளாக!" என்ற வீறிய முழக்கத்தோடு பிரம்மாண்டமான அணிவகுப்புடன் கூடிய சுதந்திர தின கொண்டாத்தட்டை புத்தூரி நடந்த இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ்!

உலக பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஹிந்துத்துவா!

நார்வேயில்  இளைஞர்கள் முகாமில் நுழைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி, 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.

இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான். நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080: ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.

அதில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களிடம் இருந்து நிறைய முஸ்லிம் விரோத கொள்கைகளை தான் பெற்று கொண்டதாக கூறியுள்ளான். முஸ்லிம்களை இந்தியாவை விட்டு துரத்துவதற்காக ஹிந்துத்துவா நடத்தும் போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவ ரீதியிலான ஆதரவை தெரிவித்துள்ளான்.


இவனது 1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ஒதுக்கியுள்ளான். மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவை எப்படி ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஹிந்துத்துவா செயல்படுகின்றன என்பது பற்றியும் விரிவாக தெரிவித்துள்ளான்.


மேலும் இவன் ஹிந்துதுவாவுக்கு சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறான். அதாவது இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு ஹிந்து நாட்டை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை துரத்த வேண்டும் இல்லை மதம் மாற்றவேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளான்.இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான்.


ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் ஹிந்துத்துவா மற்றும் வலதுசாரி கிறிஸ்தவ இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய மதசார்பற்ற சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் கொண்ட ஒரு திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.


இந்த லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவாவாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் குரு கோல்வால்கரின் ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும் அரசியல் கோமாளி சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ. பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

எல்லா மதானிக்களுக்காகவும் எஸ்.டி.பி.ஐ போராடும்- இ.அபூபக்கர்

அப்துல் நாசிர் மதானியின் விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து கூறினார்.
 
கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ சார்பாக அப்துல் நாசிர் மதானியை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறும்போது இந்தியாவில் மதானிக்கு எதிராக அநியாயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் அவருடைய விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.


நாடு முழுவதும் மதானியைப் போன்று எண்ணற்ற அப்பாவிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அதிலும் அவர்கள் விசாரணை கைதிகளாகவே சிறையில் பல வருடங்களாக இருந்து வருகிறார்கள்.
இந்தியாவில் வாழக்கூடிய 20 கோடி முஸ்லிம்களும் ஏதாவது ஒரு வழியில் அரசாங்க அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். 1998ஆம் ஆண்டு கோவை சிறைச்சாலையில் இருந்து மதானியை விடுதலை செய்யக் வலியுறுத்தி நாம் முதன் முதலாக போராட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு போராளியை விடுதலை செய்வதற்காக இன்னொரு முயற்ச்கிக்கிறார் என சிலர் நம்மை பார்த்து விமர்சனம் செய்தனர். அவர்கள் அதனை மறந்திருக்கலாம், நாம் அதை மறக்கவில்லை அதே சமயம் அவர்கள் மீது எந்த தவறான அபிப்ராயமும் கொள்ளவில்லை. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின் போது தவறுதலாக குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு இன்று வரை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மதானியை விடுதலை செய்வதற்காக ரூபாய் 34 லட்சம் வசூலித்து கிட்டத்தட்ட 37 லட்ச ரூபாய் செலவழித்ததை நினைவு கூறினார். எஸ்.டி.பி.ஐ மதானி போன்று இன்று பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி மக்களின் விடுதலைக்க்காக சட்டப்படி போராடும் என்று அவர் தெரிவித்தார். இந்துத்துவ தீவிரவாதிகள் நடத்திய மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கித்தவிக்கும் அப்பாவி மக்களுக்காகவும் எஸ்.டி.பி.ஐ போராடும் என்று தெரிவித்தார்.
 
நமது நாட்டில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவு, ஆதிவாசி மக்களை மாவோயிஸ்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். வருங்கால இந்தியாவின் கட்சியாக எஸ்.டி.பி.ஐ உருவெடுக்கும். அதன் வேக வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என இ.அபூபக்கர் கூறினார்.



எஸ்.டி.பி.ஐன் மாநிலத் தலைவர் நஸ்ருதீன் இளமரம், பி.டி.பி கட்சியின் துணைத்தலைவர் வரக்கல ராஜ், வரலாற்றாசிரியர் ஜெய் பிரகாஷ், மூவாத்துபுழா எஸ்.டி.பி.ஐ தலைவர் அஷ்ரஃப் மெளலவி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம்களின் கட்டிட கலை!

ஆக்ராவில் அமைந்துள்ள, மொகலாய மன்னர் ஷாஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜ்க்காக கட்டிய நினைவு சின்னம் தான் தாஜ்மஹால். இது இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் சிறந்த கட்டிட கலைக்கு உதாரணாமாக திகழ்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை தர மிக முக்கியமான காரணமாக தாஜ்மஹால் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம் மன்னர்கள் கட்டிய டெல்லி செங்கோட்டை, பதேபூர் சிக்ரி, ஜெயிப்பூர் அம்பர் போர்ட், ஹுமாயுன் டூம், இப்படி அடுக்கிகொண்டே போகலாம். இந்திய கட்டிட கலைக்கு முஸ்லிம்கள் மன்னர்களின் பங்களிப்பு போல் இது வரை யாரும் செய்ததில்லை.

இது கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.  கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், ரூ. 14.36 கோடியும், 2009-10ம் ஆண்டில், ரூ. 17.24 கோடியும், 2010-11ம் ஆண்டில் ரூ.19.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Saturday, July 30, 2011

இஸ்லாத்தை ஏற்றார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...

இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.

இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.

இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.
ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வாலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள். பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.

தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.

"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குர்ஆன் 42:13


இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்...

.

Thursday, July 28, 2011

லோக் ஆயுக்தா என்றால் என்ன?

இந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள ஒரு நாடு. அதற்க்கு எல்லா வளங்களும் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவு மனித வளம் மற்றும் இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா. இத்தனை வளங்களும் வாய்ப்புகளும் இருந்தும், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமாது அதிகார மட்டத்தில் உள்ள ஊழலும் லஞ்சமும் ஆகும்.இன்று நாட்டிலுள்ள மக்களின் பெரும்பாலானோர் வறுமையில் வாடும் பொது அரசியல் வாதிகள் மட்டும் சுக போகத்தில் திளைப்பதை காணமுடிகிறது.                                                      
அருண் சென் குப்தா கமிட்டி அறிக்கை நாட்டிலுள்ள வறுமை கோட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 74.7% என்று கூறுகிறது. இது போன்ற பசியிளிருந்தும், கல்வியின்மை, சுகாதாரச் சீர்கேட்டை விட்டும் இந்திய பூர்வீக மக்களை காப்பாற்ற வேண்டிய அரசாங்கம் என்ன செய்கிறது? அரசியல்வாதிகளும் அடிகாரவர்க்கத்தினரும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் இந்த கருப்பு பணத்தை சுவீஸ் போன்ற வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைக்கின்றனர். GLOBAL FINANCE INSTITUTE அறிக்கையின்படி கடந்த 59 வருடத்தில் 211 பில்லியன் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17.7% அளவிற்கு மொத்த உற்பத்தியில்(Gross Total Production) இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதன் மூலம் 211 பில்லியன் டாலர் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இது அரசாங்கத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. இது இந்தியாவில் முறையாக செலவழிக்கப்பட்டிருந்தால் ஏகப்பட்ட கடன் அடைக்கப்பட்டிருக்கும். 

லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் பாத்தும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம். இந்த விசாரணை மன்றம் முதன்முதலில் 1809- ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் அமைக்கப்பட்டது. அதன்பிறகு மேலும் பல நாடுகள் இந்த விசாரணை மன்றத்தை அமைத்தன. இந்தியாவில் 1996 ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ADMINISTRATIVE REFORMS COMMISSION (ARC) என்று சொல்லப்படும் நிர்வாக மறு ஆய்வுக் குழு, இந்தியாவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை விசாரிக்கவும், பொது மக்களை அதன் கண்காணிப்பாளர்களாக ஆக்கவும் இரண்டு பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. அதில் ஒன்று, மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபடும் போது அவர்களை விசாரிப்பதர்க்கென தனியொரு விசாரணை மன்றம் "லோக்பால்" அமைக்க வேண்டும். இரண்டாவதாக, மாநில அளவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை கண்காணிக்க "லோக் ஆயுக்தா" எனும் விசாரணை மன்றத்தை அமைக்க வேண்டும். இந்த பரிந்துரைகளை மேற்கண்ட குழு அரசுக்கு சமர்ப்பித்தது. இதில் "லோக் பால்" இன்று வரை சட்டமாக்கப்படவில்லை. அதற்க்கான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. லோக் ஆயுக்தா மசோதா ஏற்கப்பட்டு பல்வேறு இந்திய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

லோக் ஆயுக்தா தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரா(1971), பீகார்(1973), ராஜஸ்தான்(1973), உத்திரபிரதேசம்(1975), மத்திய பிரதேசம்(1981), ஆந்திரா(1983), ஹிமாச்சல் பிரதேசம்(1983), கர்நாடகா(1985), அஸ்ஸாம்(1986), குஜராத்(1986), கேரளா(1988), பஞ்சாப்(1985), டெல்லி(1996), ஹரியான(1996) ஆகியவை உள்ளன. இந்த சட்டத்தின்படி எந்த ஒரு தனி மனிதரும், வழக்கு தொடுக்க முடியும். பொதுமக்கள் தங்களது புகார்களை எழுதி லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் புகார் விசாரிக்கப்படும். விசாரணையில் ஏதேனும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கீழ்காணும் முறைகளில் தண்டிக்கப்படலாம். அதாவது அரசு அலுவலர்களின் அதிகாரத்தை குறைத்து பதவியிறக்கம் செய்தல், கட்டாய ஒய்வு அளித்தால், வேலையை விட்டு நீக்குதல், ஆண்டு சம்பள உயர்வு விகிதத்தை நிறுத்துதல் ஆகிய பரிந்துரைகளை லோக் ஆயுக்தா நிறுவனம் அரசுக்கு அளிக்கும்.மாநில அரசானது இந்த பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது மாற்றலாம். அரசு ஊழியர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மாநில உயர்நீதி மன்றம் அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஆகியவற்றை அணுகலாம். இச்சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுவது முக்கிய குறைபாடாக கருதப்படுகிறது. உதாரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தவறிழைத்த அதிகாரிகளின் பெயர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னும் வெளியிடப்படுவதில்லை.
 
லோக் ஆயுக்தாவின் அதிகாரிகளை மாநில கவர்னர் நியமனம் செய்கிறார். மேலும் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் பெற வேண்டும். லோக் ஆயுக்தாவின் நிர்வாகிகளாக பாராளுமன்ற உறுப்பினரையோ, சட்ட மன்ற உறுப்பினரையோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது. லோக் ஆயுக்தா சட்டங்கள் மாநிலத்திற்க்கேற்ப மாறுபடுகின்றன. டெல்லியில் உள்ள சட்டத்தின்படி முறையான புகார் கொடுக்கப்பட்டால், மாநில முதல்வர், மாநில அமைச்சர்கள், மாநகர மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத்தலைவர், இயக்குநர்கள், ஆகியோரை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது அதிகாரிகளின் ஊழல், ஒருசார்பு நிலை, அடக்குமுறை, நேரிதவறுதல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு ஆகியவை குறித்து உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம். எந்த ஒரு தனி மனிதரும், அவர் அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவ்வாறு இல்லாவிட்டாலும் உரிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பின் அவர் வழக்கு தொடுக்க முடியும். அதிகாரவர்க்கத்தை நடுநடுங்கச் செய்யும் இந்தச் சட்டம் தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் என்பதே நாட்டின் நலனில் அக்கறை உடையவர்களின் எதிர்பார்ப்பு. லோக் ஆயுக்தா சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு அதனை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் அவா.

நன்றி - melapalayamvoice.blogspot.com


வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு

கடந்த 19.7.11 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் மாநில தலைவர் சகோ.ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களால் திறக்கப்பட்டது. நகரத் தலைவர் ஜி.அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். சரியாக மாலை 7.30 மணியளவில் அலுவலகத்தை திறந்து வைத்த மாநில தலைவர், ஆரம்ப காலத்தில் இயக்கம் கடந்து வற்த பாதை மற்றும் சாதித்த விஷயங்களை பற்றி பேசினார். நகரத் தலைவர் அப்துல் ரஹீம் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர்கள், உள்ளூர் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Wednesday, July 27, 2011

இந்திய அரசால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்!

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும்.

அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.

அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால் - இன்னும் மத்திய அரசிடமிருந்து முறையான உத்தரவு வரவில்லை என்று அதிகாரிகள் பதில் சொல்வார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் உள்ளது. முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு.

இக்குழு இந்தியா முழுவதும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு 404 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்திய நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்க்கை நிலையின் அவலங்கள் இவ்வறிக்கையின் மூலம் வெளிப்பட்டபோது முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பல மாநிலங்களில் கல்வி, பொருளாதார நிலைகளில் தலித் மக்களை விடவும், துப்புரவுத் தொழிலாளர்களை விடவும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின் தங்கியிருப்பதும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை முஸ்லிம் சமூகத்திற்கு மறுக்கப்பட்டு வரும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.
நாடு முழுவதும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. இதனால் முஸ்லிம்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 15 அம்சத் திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இதன்படி முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற 90 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் பொதுவாக முஸ்லிம்களை கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது மத்திய அரசு.
சச்சார் அறிக்கையில், ஓரளவு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள மதத்தைக் காரணம் காட்டி, வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கையிலெடுத்திருக்கும் மத்திய அரசு, ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து வருகிறது. இந்த வரைவுத் திட்டத்தின்படி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாது வாடகைக்கு வீடு தர அல்லது வீட்டு வசதியை மறுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கவும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்திருக்கிறது மத்திய அரசு.
இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித பயனும் விளையப் போவதில்லை. முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தரவில்லை என்றால் சட்டப்படி அது தவறு என்பதை விளங்கிக் கொள்ளும் வீட்டின் உரிமையாளர், வாடகைத் தொகையையும், முன் பணத்தையும் வேண்டுமென்றே கூட்டிச் சொல்லி தானாகவே முஸ்லிம்கள் விலகிக் கொள்ளும் வகையில் நடந்து கொண்டால் சட்டத்தால் அவர்களை என்ன செய்து விட முடியும்?
ஒரு வேளை அதிக வாடகை இருந்தாலும் ஓ.கே. என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சிலரால் வீட்டு உரிமையாளருக்குத்தான் ஆதாயம் ஏற்படும். இதுமட்டும்தான் இச்சட்டத்தால் ஏற்படும் பயனாக இருக்க முடியும். இதுபோன்ற வீண் நடவடிக்கைகளை விட்டு விட்டு முஸ்லிம்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தித் தர மத்திய அரசு முன் வர வேண்டும். இது ஒன்றுதான் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டமாக இருக்கும். இதுவல்லாமல் 15 அம்சத் திட்டம் என்ன 80 அம்சத் திட்டம் போட்டாலும் அது - தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்ற மட்டுமே உதவும்.

உணர்வற்ற உணர்வு(!) இதழின் அவதூறும் - மறுப்பும்

              சமுதாயத்தில் குழப்பம் செய்வதையும், சமுதாய தலைவர்கள், இயக்கங்கள் மற்றும் கட்சிகள் மீது அவதூறு சகதியை அள்ளி இறைப்பதை மட்டுமே தனது தொழிலாகக் கொண்டு வெளிவரும் சமூக, சமுதாய உணர்வற்ற உணர்வு(!) இதழ் தனது ஜுலை 15-21 இதழில் வழக்கம் போல் ஈனத்தனமாக ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது.

            “போதை பொருள் கடத்திய போராளிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அச்செய்தியில் SDPI ன் மீது அவதூறை அள்ளி வீசி தனது அரிப்பை தீர்த்துள்ளது உணர்வு(!).உண்மையில் என்ன நடந்தது என்று நாம் விசாரித்த போது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரவுன் சுகர் கடத்திய 3 பேரை காவல்துறை கைது செய்தது. ஹாரிஸ் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.இந்த ஹாரிஸ் என்பவர் SDPI ன் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பஞ்சாயத்தில் ஒரு வார்டில் போட்டியிட்டார் என்பதை தவிர SDPI ன் எந்த பொறுப்பையும் வகிக்காதவர். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் SDPIன் எந்த பணிகளிலோ, நிகழ்ச்சிகளிலோ அவர் ஈடுபடவுமில்லை என்பதோடு அவரின் தவறான நடவடிக்கைகள் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 6 மாதங்களுக்கு முன் SDPI ன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

                         இந்த சம்பவம் நடந்ததும் கேரளாவில் SDPI க்கு எதிராக வரிந்து கட்டி செய்தி வெளியிடும் தமிழகத்தின் தினமலர் போன்ற “மாத்ரு பூமி மற்றும் உணர்வை” போன்ற சில இதழ்கள் இந்த சம்பவத்தை SDPI யோடு சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டன.உடனே இது சம்பந்தமாக பாலக்காடு மாவட்ட SDPI  செயலாளர் அப்துல் ரஷீது, ஹாரிஸ் SDPI ல் இருந்து 6 மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டவர் என்பதையும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் SDPI யின் எந்த நிகழ்ச்சிகளிலும், பணிகளிலும் அவர் ஈடுபடவில்லை என்பதை குறிப்பிட்டு பத்திரிகை செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். இதன்பிறகு தங்கள் அவதூறுகளை ஊடகங்கள் நிறுத்திக் கொண்டன.

                             இவ்வழக்கை விசாரித்து வரும் மலப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.சேதுராமனிடம் நிருபர்கள்  ஹாரிசுக்கும், SDPI க்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்வியெழுப்பிய போது ஹாரிஸ் 6 மாதத்திற்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தனது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும்  SDPI க்கும் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியும், SDPI யின் மறுப்பும் “தேஜஸ்” நாளிதழில் வந்த செய்தியும் நகலாக அருகே தரப்பட்டுள்ளது.
மாத்ருபூமி நாளிதழ் தமிழகத்தின் தினமலரை போல சிறுபான்மை சமூகத்திற்கெதிராக, குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்திற்கெதிராக அவதூறுகளை அள்ளித்தெளிக்கும் நாளிதழ்.
                                 சங்பரிவார்கள்,அவர்களை சேர்ந்த ஊடகங்கள் மற்றும் உளவுத்துறையினரின் கூற்றை பின்பற்றி சமுதாய அமைப்புகளையும், அதன் தலைவர்களையும் தீவிரவாதிகள் எனக் காட்டிக் கொடுக்கும் அமைப்பின் உணர்வு இதழ் மாத்ரு பூமியின் செய்தியை ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டதில் ஆச்சரியமில்லை.பல்லாயிரக்கணக்கான பஞ்சாயத்துகளில் ஒரு பஞ்சாயத்தின் ஒரு வார்டில் SDPI சார்பாக போட்டியிட்டவர் என்பதை தவிர வேறு எந்த பொறுப்பையும் வகிக்காத, ஆறு மாதங்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, கடந்த ஆறு மாதமாக கட்சியின் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத ஒருவரை SDPI யின் முக்கிய பிரமுகர் என்று குறிப்பிட்டதன் மூலம் உணர்வின் காழ்ப்புணர்வை நாம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் எந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளும், எந்தக் கட்சிகளின் ஆதரவுமின்றி தனித்து நின்று வாங்க முடியாத வாக்குகளைத்தான் முஸ்லிம் உறுப்பினர்களை அதிகமாகக் கொண்ட SDPI பெற்றுள்ளது.

“ம.ம.க வின் வெற்றியை சிறுமைப்படுத்துவதற்காக” தனது இதழிலேயே “ம.ம.க வை மிஞ்சியது SDPI” என கட்டுரை வெளியிட்ட உணர்வு, இந்த கட்டுரையில் தமிழகத்தில் SDPI போட்டியிட்டு டெபாசிட் இழந்தது என குறிப்பிட்டு சிறுமைப்படுத்த முயற்சித்ததின் மூலம் தனது குள்ள நரித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

SDPI போட்டியிட்ட எந்த தொகுதிகளிலும் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க தங்களுக்கு வாக்களியுங்கள் என கோரவுமில்லை, அது SDPI  ன் கொள்கையுமில்லை.

 
SDPI அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மை சமூக மக்களையும் ஒருங்கிணைத்து பயணிக்கும் கட்சி என்கிற வகையில் ஒரு கிருஸ்துவரை வேட்பாளராக நிறுத்தியதில் எந்த ஆச்சரியமுமில்லை.
இவர்களின் அமைப்பை சார்ந்தவர்களின் மீது மட்டுமல்ல, தலைவர்களின் மீதே பாலியல், கொலை, காட்டிக் கொடுத்தல், மோசடி என எண்ணற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்களாலேயே அவர்கள் அமைப்பின் முன்னாள் தலைவர்கள், பிரமுகர்கள் மீது (அமைப்பில் செயல்பட்ட காலத்தில்) சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் ஏராளம்.

 
மேட்டுப்பாளையத்தில் இவர்களின் மாவட்டத்தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான அப்துல் ரஷீது என்பவர் சில மாதங்களுக்கு முன் அடுத்தவர் மனைவியை கடத்தி சென்ற போது கூட, அது அவரின் தனிப்பட்ட தவறு என்றுதான் என அனைத்து அமைப்புகளும் அமைதி காத்தன.
 
எனவே பிறர் மீதோ, பிற அமைப்புகள் மீதோ குற்றம் சாட்டும் தகுதி தனக்குள்ளதா என்பதை உணர்வும், அதைச் சேர்ந்த இயக்கமும் உரசிப் பார்க்கட்டும். அவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் திருத்தப்படுவார்கள், தமிழக மக்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என நம்புவோம்! 




- சிக்கந்தர்
நன்றி: புதிய பாதை

ஹிந்துத்துவாவை தப்பவைக்க நினைக்கும் புலனாய்வு துறைகள்!

                   JULY 26, மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிர மடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர்.
                              புலனாய்வு ஏஜன்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனக் குற்றஞ்சாட்டி என்.ஐ.ஏ குழு திரும்பி விட்டதாக கருதப்படுகிறது. 22 பேரின் மரணத்திற்கு காரணமான தொடர் குண்டுவெடிப்பைக் குறித்து விசாரணையை ஒருங்கிணைக்க மும்பை தாக்குதலின் பின்னணியில் உருவான என்.ஐ.ஏ அதிகாரிகள் மும்பைக்கு வருகைத் தந்தனர்.ஆனால், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், க்ரைம் ப்ராஞ்சும் தேசிய புலனாய்வு ஏஜன்சியுடன் ஒத்துழைக்க மறுத்துள்ளன. ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ அதிகாரிகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு விசாரணையை நிறைவுச்செய்ய முடியாது என ஏ.டி.எஸ் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

                     மும்பை குண்டுவெடிப்பு விசாரணையில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா இயக்கங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. இதற்க்கு மும்பை மாநில புலனாய்வுத்துறை ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துள்ளது. இதனால் நேசனல் புலனாய்வுதுறைக்கும் மும்பை புலனாய்வு துறைக்கும் மத்தியில் கருத்துவேறுபாடு வந்துள்ளது

நோர்வே குண்டு வெடிப்பும் வெள்ளையின பயங்கரவாதமும்

          
                 22 ஜூலை 2011, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகை உலுக்கி விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல், நகர மத்தியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களை இலக்கு வைத்து கார்க் குண்டு வெடித்துள்ளது. பிரதமர் அலுவலகமும், சில அமைச்சு அலுவலகங்களும், குண்டுவெடிப்பால் சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள் தகர்ந்துள்ள போதிலும், இரு வழிப்போக்கர்கள் மட்டுமே அகால மரணமடைந்துள்ளனர். அரச ஊழியர்களின் இழப்பு குறித்த தகவல்கள் தெரியவில்லை. பிரதமர் இரகசியமான இடத்தில் பத்திரமாக இருப்பதாக அறிக்கைகள் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், நோர்வேயில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் இதுவாகும். சமாதான விரும்பிகளின் நாடு என்ற விம்பத்தை தகர்த்த, குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் யார், என்ற ஊகங்கள் நாலாபக்கமும் இருந்து கிளம்பின. ஊடகங்கள் வழமை போல அல்கைதாவை குற்றம் சுமத்தின. "நோர்வே ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருப்பதால் பழிவாங்கத் துடித்த அல்கைதா..." "ஈராக்கிய இஸ்லாமிய மதத் தீவிரவாதி முல்லா நாடுகடத்தப்படவிருந்ததால், நோர்வே அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்..." "லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சில் நோர்வே பங்கெடுப்பதால், எச்சரிக்கை விடுத்த கடாபியின் கைக்கூலிகள்..." இவ்வாறு அனைவரின் கவனமும் மத்திய கிழக்கு, அல்கைதா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பக்கமே குவிந்திருந்தது. "உள்ளூர் பயங்கரவாதிகள்" என்று பல தசாப்தங்களாக நோர்வேயில் வாழும் பாகிஸ்தானிய சமூகமும் குற்றம் சாட்டப்பட்டது.

                       பி.பி.சி. உலகச் சேவையில் தோன்றிய, நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவர், "சந்தேகத்திற்கிடமின்றி இது அல்கைதாவின் செயல் தான்." என்று பிதற்றினார். உலகில் இதற்கு முன்னர் இடம்பெற்ற "அல்கைதா குண்டுவெடிப்புகள்" அதிகளவு பொதுமக்களின் இழப்புகளை ஏற்படுத்திய "மென்மையான இலக்குகள்" என்ற உண்மை அந்த நிபுணருக்கு தெரியவில்லை. ஓரிரு மணிநேரத்தின் பின்னர், நோர்வேயில் இருந்து இன்னொரு தகவல் வந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. ஆளும்கட்சியின் கூட்டம் ஒன்றில், சரமாரியாக சுட்டுத்தள்ளிய நபர், போலிஸ் உடையில் வந்த நோர்வீஜிய தோற்றம் கொண்ட வெள்ளையினத்தவர். பிபி.சி. அந்த செய்தியை அறிவித்ததும், மீண்டும் "பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்" என்ற பைத்தியம் உளற ஆரம்பித்து விட்டது. "அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை இனத்தவர்களை சேர்த்து வருகின்றனர். பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக, அத்தகைய நபர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்."

                ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன? தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார். வெளிநாட்டுக் குடியேறிகளை கட்டுப்படுத்துமாறு, வலதுசாரிகள் நோர்வே அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். தற்போது உள்நாட்டை சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் தான் இந்த பயங்கரவாத செயலை புரிந்துள்ளமை நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.


                  தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கும், நேரமும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களில் பணிபுரிவோர், மற்றும் பிரதமரை கொலை செய்யும் நோக்கில் குண்டு வெடிக்கப் பட்டிருக்கலாம்.வெள்ளிக்கிழமை பிற்பகல் என்பதால் மட்டுமல்ல, நோர்வேயில் தற்போது கோடை கால விடுமுறைக் காலம் என்பதாலும், தெருவில் சன நடமாட்டம் குறைவு.ஆகையினால், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சாதாரண பொதுமக்களின் இழப்பை குறைக்க விரும்பியுள்ளனர். அல்கைதா பாணி தீவிரவாதிகள் என்றால், "மத நம்பிக்கையற்ற எல்லோரும் பரலோகம் போக வேண்டும்..." என்று விரும்பியிருப்பார்கள். பிற்காலத்தில் மக்கள் ஆதரவை இழக்க விரும்பாத உள்நாட்டு அரசியல் சக்தி ஒன்று தான் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கும். உள்நாட்டில் வளர்ந்து வரும் நவ-நாஜிச அல்லது தீவிர வலதுசாரிக் குழுக்கள் மீது தான் இயல்பான சந்தேகம் திரும்புகின்றது.

                   நோர்வேயில் நவ நாசிச கொள்கை கொண்ட குழுக்கள் தடை செய்யப் பட்டிருந்த போதிலும், "வெகுஜன அரசியல்" செய்யும் Fremskrittspartiet போன்ற கட்சிகள் வளர்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், "நோர்வேயின் பிற நகரங்களும் ஒஸ்லோ போன்று மாறி வருகின்றன... வெளிநாட்டவர் தொல்லை அதிகரிக்கின்றது... கிரிமினல்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், அகதிகள் பெருகி வருகின்றனர்." என்று உள்ளூர் நாளிதழ் ஒன்றில் ஒப்பாரி வைத்தது. அவர்களைப் பொறுத்த வரையில், இந்த தீமைகளுக்கெல்லாம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Arbeiderpartiet) தவறான கொள்கை காரணமாகும். குறிப்பாக "முஸ்லிம் குடியேற்றவாசிகள் பெருகி வருவதால், நோர்வேயில் குண்டு வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை..." என்று இனவாதக் கருத்துகளை பரப்பி வருகின்றது.

                    தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு தீவிர வலதுசாரி கொள்கை கொண்டோரே காரணம் என்பதால், நோர்வே மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு குறையலாம். ஆனால், நீண்ட கால நோக்கில், தீவிரவாத எண்ணம் கொண்டோருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம். எப்படியும் "வீர சாகசங்களைப் புரியும் செயல்வீரர்கள்" மீது மக்கள் மதிப்பு வைக்கலாமல்லவா? பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தாக்குதலில் ஈடுபட்ட Anders Behring Brevik என்ற 32 வயது இளைஞனின் கொள்கையும் அதுவாக இருந்துள்ளது. அந்த நபரின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் காணப்பட்ட வாசகங்கள் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளன. "ஒரு மத நம்பிக்கையாளன், வெறும் நலன்களை மட்டுமே பேணும் ஒரு இலட்சம் படைவீரருக்கு சமமானவன்." என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரேயொரு வாசகம் மட்டுமே டிவிட்டரில் காணப்பட்டது. இதை விட, இணைய விவாதங்களில் கலந்து கொண்டு, கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கருத்துகளை உதிர்த்துள்ளார். நெதர்லாந்தின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ், மறைந்த பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் ஆகியோரின் அபிமானியாக இருந்துள்ளார். முகநூலில் சிறந்த நூலுக்கான இவரது தெரிவாக ஆர்வேல் எழுதிய "1984" காணப்படுகின்றது. இவர் தன்னை ஒரு நோர்வீஜிய தேசியவாதியாக இனங்காட்டியுள்ளார். தற்காலத்தில் நடப்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போர் இல்லை. மாறாக, சர்வதேசியத்திற்கு எதிரான தேசியவாத சக்திகளின் போர்." என்று அந்த வெள்ளையின பயங்கரவாதி தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளார்.

                    ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, அங்கிருந்து 40 கி.மி. தூரத்தில் உள்ள "உத்தேயா" (Utøya) என்னும் தீவில் தான் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் அந்தத் தீவில் நடந்து கொண்டிருந்தன. நாடு முழுவதிலும் இருந்து, இளம் வயது கட்சி உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் கட்சி இன்று ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சியாக மாறி விட்டாலும், வெளிநாட்டவர் மத்தியில் மத்திய-இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டது. இதனால் பல அந்நிய குடியேறிகளின் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் கட்சியின் கோடைகால முகாம் நடைபெற்ற இடத்திற்கு, கொலைகாரன் பொலிஸ் உடையில் சென்றுள்ளான். "ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அனுப்பப் பட்டதாக..." கூறியுள்ளான். தொடர்ந்து, கண்மூடித் தனமாக சுட்டதில் 90 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினர், Anders Brevik என்ற கொலைகாரனை மடக்கிப் பிடித்துள்ளனர். இருப்பினும், ஒரேயொரு நபர், ஒரு தானியங்கி துப்பாக்கி மூலம், 90 பேரை சுட்டுக் கொன்றமை நம்புவதற்கு கடினமானது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்னொரு நபரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பிறிதொரு இடத்தில் கைது செய்ததாகவும் அறிவித்தார்கள். ஆரம்பத்தில், தாக்குதல்கள் "ஒரு மனநோயாளியின்" செயல் என்று தெரிவித்தார்கள். போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.

                        தாக்குதல்கள் யாவும், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை குறி வைத்தே இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த சம்பவம் காரணமாக தொழிலாளர் கட்சிக்கு வருங்கால தேர்தல்களில் அனுதாப வாக்குகளை பெற்றுத் தரலாம். இருப்பினும், இளைஞர் அணியை சேர்ந்த 90 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை தோற்றுவிக்கலாம். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இதனால், தூர நோக்கில் தொழிலாளர் கட்சியை நோர்வேயில் இல்லாதொழிக்கும் நோக்கம் தெரிகின்றது. தொழிலாளர் கட்சியின் மீது யாருக்கு அவ்வளவு கோபம்? தொழிலாளர் கட்சி வலதுசாரி சந்தர்ப்பவாதப் பாதையில் சென்ற போதிலும், இளைஞர் அணியினர் மத்தியில் இடதுசாரிப் போக்கும் காணப்படுகின்றது. சமீப காலமாக,"பாலஸ்தீன சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும்." என்பன போன்ற குரல்கள் கேட்கின்றன. மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த தினத்தன்று, முன்னாள் நோர்வே பிரதமர் வருகை தருவதாக ஏற்பாடாகியிருந்தது. இன்றைய பிரதமர் அப்பட்டமான வலதுசாரி என்பதும், முன்னை நாள் பிரதமர் ஓரளவு இடதுசாரி பக்கம் சாய்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

                 இதற்கு முன்னர் குறிப்பிட்ட தீவிர வலதுசாரியினர், நவநாஜிகள் மட்டுமல்லாது, வேறு சக்திகள் சம்பந்தப் பட்டுள்ளனவா? நோர்வே வட அட்லாண்டிக் இராணுவக் கூட்டில் (நேட்டோ) அங்கம் வகிக்கின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நோர்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசி வந்துள்ளன. நேட்டோ இராணுவ நடவடிக்கையின் ஓரங்கமாக நோர்வே செயற்பட்டு வந்தாலும், இந்த வாரம் குண்டுவீச்சை நிறுத்திக் கொள்வதென்று தன்னிச்சையாக அறிவித்தது. அதாவது, வருகிற ஆகஸ்ட் முதலாம் தேதியில் இருந்து, நோர்வே விமானங்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட மாட்டா. இதனால், நோர்வே அரசுக்கும், பிற நேட்டோ உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தாக்குதல் நடந்திருக்கலாம். நேட்டோ, அல்லது நோர்வே அரச மட்டத்தை சேர்ந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தாக்குதலில் சம்பந்தப் பட்டிருக்கலாம். நேட்டோ ஐரோப்பாவில் இரகசியமாக ஒரு பயங்கரவாத அமைப்பை (Gladio) உருவாக்கி வைத்துள்ளது. அந்த இரகசிய அமைப்பு இத்தாலி போன்ற நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. இதுவரை குண்டுகளை வைத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதே போல, ஒஸ்லோ குண்டுவெடிப்பை நடத்திய சூத்திரதாரிகள், அவர்களின் நோக்கங்கள் என்பன இனி ஒரு காலமும் வெளிவராமல் போகலாம்.




மேலதிக விபரங்களுக்கு:
Olso Attacks Suspect Is 'Conservative Christian'
Pågrepet 32-åring kalte seg selv nasjonalistisk
Anders Behring Breiviks kommentarer hos Document.no
Terrorsiktet kjøpte seks tonn kunstgjødsel
TERRORAKSJON I OSLO

Tuesday, July 26, 2011

ஆர்.எஸ்.எஸ் - ஐ உடனே தடை செய்

                 இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும்  அதற்க்கு காரணம் இந்தியன் முஜாகிதீன் என்றும் .பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் ,ஆந்திர  முஜாகிதீன்கள் என்றும் ,புதிய புதிய முஜாகிதீன்களை உருவாக்கும் இந்தியாவின் முட்டாள் உளவு துறைக்கும் இந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் ஒரு வேண்டுகோள்
                          இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் தீவிரவாத இயக்கமான R.S.S  தான் என்பதற்கு ஏராளமான காரணங்களை  திட்டவட்டமாக கூற  முடியும் அதில் முக்கியமானதாகவும்  ஆதரமாகவும் இருக்க கூடியது மாலகானில் பெண் தீவிரவாதி பிரக்யாத்சிங்கால் நடத்தப்பட்ட  குண்டு வெடிப்பு இன்னும் இந்தியாவில் நடைபெற்ற அநேக  குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என்று வாக்குமூலம்  அளித்த அசிமானந்த ,ஹைதராபாத் குண்டுவெடிப்பு மட்டும் இன்றி குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜித்  இடிப்பு , மண்டைகாடு கலவரம் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு இந்த R.S.S தீவிரவாதிகளால். 
 
                          இந்த இந்தியாவில் பல வன்முறைகள்,மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னணியில் நின்றது R.S.S தான் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்  மாவீரன் கர்கறேயின் மரணம் .ஆக இதை போன்று இப்போது மும்பையில்  நடை பெற்ற  குண்டு வெடிப்புக்கு காரணம் R.S.S தான் என்று  திட்டவட்டமாக கூற முடியும்
               இந்தியா அரசாங்கத்தால்  இரண்டுமுறை தடை செய்யப்பட்ட இந்த  R.S.S தீவிரவாத இயக்கம் மீண்டும் நிரந்தரமாக  தடை செய்ய பட வேண்டும்

பா.ஜ.க.வே! உன்னால் தடை செய்ய முடியாது!

                மங்களூர்: மங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை ஆதரித்தும் கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கர்நாடகா அரசின் அராஜக போக்கை கண்டித்து நகரில் துணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்து மத வெறி பிடித்த ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதில் முக்கியமாக "உங்களால் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்யமுடியாது!" என்ற கோஷம் அந்த இடத்தையே அதிரச்செய்வதாக இருந்தது.
                  உங்களால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அழிக்க முடியாது ஏனென்றால் என்றோ பாப்புலர் ப்ரண்டும் சரி, அதனுடைய சமூகப்பணிகளும் சரி கர்நாடக மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து விட்டது, மக்களின் இதயங்களை உடைக்க உங்களால் முடியாது. இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் அப்துல் வாஹித் கூறினார்.தனது உரையின் தொடக்கத்தில் ஹுன்சூர் மாவட்டத்தில் நடந்த மாணவனின் கொலையை வன்மையாக கண்டித்தார். இதை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்கக்கூடாது என்று கூறினார். ஒவ்வொரு தனி நபரும் இத்தைகைய செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

                       ஆனால், ஆளூம் பா.ஜ.க அரசாங்கமோ இந்த கொலையை கே.எஃப்.டி யோடு தொடர்பு படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. கே.எஃப்.டி (கர்நாடகா ஃபாரம் ஃபார் டிக்னிடி) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு இணைந்து 6 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்த போதும் பா.ஜ.க அரசாங்கம் கே.எஃப்.டியை தடை செய்யவேண்டும் என்று ஒப்பாரி வைக்கின்றது.பா.ஜ.க அரசின் இந்த ஒப்பாரி இன்றைக்கு நேற்றல்ல மாறாக கடந்த 2009 ஆம் ஆண்டு மைசூரில் ஏற்பட்ட கலவரத்தின் போதும் இதையே செய்தது. சங்கப்பரிவார தீவிரவாதிகள் மைசூரில் உள்ள பள்ளி வாசலில் பன்றியின் தலையை வெட்டி போட்டது. ஆனால் இதை செய்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தான் என்று பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்பியது. அத்தோடு மட்டுமல்லாமல் சில அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. இதனை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய "சிறைச்செல்வோம்" போராட்டத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றூம் பொதுமக்கள் கூடிய அந்த கூட்டத்தில் தடியடி நடத்தி அராஜக செயலில் ஈடுபட்டது. பின்னர் இதன் விசாரணை உயர் நீதி மன்றத்திற்குச் சென்றது அங்கே கர்நாடகா அரசுக்கு எதிராக ரூபாய் 50,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
                 பா.ஜ.க அரசு தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. காரணம் அவர்கள் செய்யாத பல நல்ல காரியங்களை நாம் செய்து வருகிறோம். நாம் மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுடைய குறைகளையும், பிரச்சனைகளையும் கேட்டறிந்து அவர்களுக்கு தீர்வையும் ஏற்படுத்திக்கொடுக்கின்றோம். நமது பணிகள் ஒன்றும் மறைத்து செயல்படக்கூடியதல்ல மாறாக மக்கள் மத்தியில் வெளிப்படையாக செய்யக்கூடியதேயாகும் என்று அப்துல் வாஹித் கூறினார்

           சமூக ஆர்வளர் ஜி. இராஜசேகர் அவர்கள் கூறும் போது பாப்புலர் ஃப்ரண்டை ஹுன்சூர் கொலை வழக்கோடு தொடர்பு படுத்துவது அந்த இயக்கத்தின் மீதான சதியாக மட்டும் நான் பார்க்கவில்லை மாறாக அது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதான சதியாகவே எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் பா.ஜ.கவினர் ஒருபோதும் முஸ்லிம்களின் வளர்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.பா.ஜ.க அரசாங்கம் தலித்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசாங்கத்திற்கெதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
                               ஒருவன் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். நீதிமன்றத்தின் முடிவுக்கு முன்னால் யாரையும்  அவரது குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் குற்றவாளி என்று கூறுவதற்கு அதிகாரம் இல்லை. ஆனால் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சர் கே.எல். அஷோக் குற்றம் நடந்த உடனேயே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கினார். இதிலிருந்து பா.ஜ.க அரசின் முஸ்லிம் விரோத போக்கையும் அவர்கள் செய்யும் சதியையும் நாம் அறிந்து கொள்ளலாம் என ஜி.இராஜசேகர் கூறினார்.

                         மங்களூர் பல்கழைகழகத்தின் பேராசிரியர் பட்டாபிராம சோமயாஜி அவர்கள் கூறும்போது, நமது நாட்டைல் தடைசெய்யப்படவேண்டிய இயக்கம் என்று ஒன்று இருந்தால் அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான். பா.ஜ.க அரசு மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உடனே தடை செய்யவேண்டும், காரணம் அதனுடைய உறுப்பினர்கள் இன்று நமது நாட்டைல் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நந்திக், மக்கா மஸ்ஜ்தி, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் போன்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் இவர்கள் ஈடுபட்டது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் அவர் கூறும்போது ஆர்.எஸ்.எஸ்-ன் உறுப்பினர்தான் நமது தேசப்பிதா மஹாத்மா காந்தியை கொன்றான் என்றும், சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

                 மேலும் அவர் கூறியதாவது, இன்று பா.ஜ.க தலைவர்களின் ஊழல் ரகசியங்கள் இன்று வெளிவந்து கொண்டிருக்கிறது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே பா.ஜ.க இதை போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறது. இன்று முதலமைச்சர் எடியூரப்பா மற்றம் அவரது அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதும் இதனால் நாட்டிற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
                           என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் உடுப்பி மாவட்ட தலைவர் பேராயர் வில்லியம் மார்டிஸ் அவர்கள் உரையாற்றும் போது " நான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு இருக்கின்றேன் காரணம் பாப்புலர் ஃப்ரண்ட் மக்கள் சேவையில் ஈடுபடுபவர்கள். அநீதிக்கு எதிராக போராடுவதால் பா.ஜ.க அரசு இவ்வமைப்பை தடை செய்ய முயற்சிக்கிறது. நான் இன்று உடல் நிலை சரியில்லாதிருக்கிறேன் இருந்த போதும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டே ஆகவேண்டும் என்ற தான் வந்தேன். நீதிக்காக போராடுவதில் என் உயிரையும் கூட தியாகம் செய்ய நான் தயாராக உள்ளேன்." என்று அவர் உணர்சியுடம் பேசினார்.

                                பாப்புலர் ஃப்ரண்டின் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரியாஸ், எஸ்.டி.பி.ஐயின் உடுப்பி மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஜா, டக்ஷின் கன்னட மாவட்டத்தின் பொதுச்செயலாளர் அக்பர் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மங்களூர் மாவட்ட தலைவர் முஹம்மது ஷரீஃப் வரவேற்புரை ஆற்றினார். சகோதரர் நஜீர் தும்பே நன்றியுரை தெரிவித்தார்.

நன்றி :  ஹார்பர்-பாப்புலர்ஃப்ரண்ட்

Monday, July 25, 2011

தாருல் உலூம் (தியோபந்த்) மதரஸாவின் பொறுப்பிலிருந்து குலாம் வஸ்தான்வி நீக்கம்!

                  தியோபந்த்: இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க, பிரபல இஸ்லாமிய மதரஸாவான "தாருல் உலூம்"மதரஸாவில் இதுவரை மூத்த ஆசிரியராகவும், அமீராகவும் செயல்பட்டு மெளலானா குலாம் வஸ்தான்வி அவர்கள் தான் வகித்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மதரஸாவின் உயர் மட்ட குழுவான "மஜ்லிலே சூரா" கடந்த ஞாயிற்றுகிழமை ஒன்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. 
              குலாம் வஸ்தான்விக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 3 உறுப்பினர் கொண்ட குழு தங்களது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.இந்த செய்தி வெளியிடப்பட்டதும் உடனடியாக கடும் கோபத்துடன் வஸ்தான்வி மதரஸாவிலிருந்து வெளியேறியுள்ளார். மதரஸாவிலுள்ள் குறிப்பிட்ட சில நபர்களின் சதியின் காரணமாகவே தான் நீக்கப்பட்டதாகவும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை முழுவதுமாக சமர்பிக்கப்படவில்லை என்று வஸ்தான்வி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.  
               மதரஸாவில் பயிலும் மாணவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய சில நபர்களை அடையாளப்படுத்த இந்த அறிக்கை தவறிவிட்டது என்றும் வஸ்தான்வி கூறியுள்ளார். நான் எனது பொறுப்பிலிருந்துதான் நீக்கப்பட்டுள்ளேன் எனினும் நான் அக்குழுவின் உறுப்பினராக உள்ளேன் என்று கூறினார்.

                         கடந்த சில மாதங்களுக்கு முன்னால் குஜராத் முதல் மந்திரியை வஸ்தான்வி அவர்கள் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தை நல்ல முன்னேற்றமான பாதையில் எடுத்துச்செல்வதாகவும் அவர் கூறி இருந்தார். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.அப்போதே மதராஸாவின் உயர் மட்டக்குழு ஒன்று கூடி வஸ்தான்வி அவர்களை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தது. அப்போது வஸ்தான்வி அவர்கள் அக்குழுவின் உறுப்பினர்களிடம் தன்னை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டாம் என்றும் தானே விலகி விடுவதாகவும் கூறி இருந்தார். ஆனால் அவர் கூறியது போல் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்று கூறினார். இதனால் மீண்டும் அக்குழு ஒன்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இனி வரும் காலங்களில் மெளலானா அப்துல் காசிம் நோமனி, வஸ்தான்வி வகித்த  பொறுப்பிலிருந்து செயல்படுவார் என அக்குழு தீர்மானித்துள்ளது.
 
நன்றி : துறைமுகம் - பாபுலர் பிரண்ட்

கூத்தாநல்லூரில் நடைபெற்ற இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு

                   கூத்தாநல்லூர்-ல் சீமான் ( SIMAN - Sharjah Islamic Madarasa Association ) அமைப்பு நடத்திய இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு அல்லாஹ்வின் நற்கிருபையால் இனிதே நடைபெற்றது.
                     கூத்தாநல்லூர் ஈத்காஹ் மைதானத்தில் மிக பிரமாண்ட மேடையில் அல்ஹாஜ் T.M.பகுருதீன் அவர்களின் தலைமையில் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. M.R.E. அப்துல் ரஹ்மான் 
( இணைசெயலாளர், சீமான் ) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். Av.M. ஜாபர்  தீன், N.M.A. சிகாபுதீன், J.M.A.ஷேக் அப்துல் காதர், T.M.தமிஜு தீன், A.P.N.அப்துல் ரவூப், L.M.அஸ்ரப் போன்ற கூத்தாநல்லூர் தலைவர்கள் முன்னிலையில் சீமானின் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.

              கம்பம் பீர் முஹம்மது அவர்கள் "குழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சீமானின் சிறப்பு மலரை சென்னை உயர்நீதி மன்றம், நீதிபதி G.M.அக்பர் அலி அவர்கள் வெளியிட்டார், அதை M. ஷாகுல் ஹமீது ( MD , Nobel Group of Companies, Abudhabi  ) அவர்கள் பெற்றுகொண்டார். பெண்கள் விழிப்புணர்வு பாடல்களை சீமானின் தீன்இசைவேந்தர் A.S. தாஜுதீன் பாடினார். ஷரியத் பாதுகாப்பில் பெண்கள் என்ற தலைப்பில் A.S. பாத்திமா முஸபர் சிறப்புரை ஆற்றினார்.  முஹம்மத் மாலிக் நன்றியுரை ஆற்றினார். கல்வி உதவி தொகையை ஏழை மாணவ மாணவியருக்கு சீமான் அமைப்பினர் வழங்கினார்கள். மாநட்டில் கலந்துகொண்ட 2000 பேருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. வெளி ஊரில் இருந்து வந்த மக்களுக்காக வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவினை சிறப்பாக நடத்தி கொடுத்த கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் ( KEO ) மற்றும் கூத்தாநல்லூர் இஸ்லாமிய இளைஞர்களையும் சீமான் அமைப்பினர் பாராட்டினார்கள். மாநாடு 10 :30 மணியளவில் நிறைவடைந்தது.

கேரளா:நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு

                  கோழிக்கோடு:சுதந்திர தினத்தையொட்டி வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கேரள மாநிலத்தில் 4 இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமைச்செயலகம் தீர்மானித்துள்ளது
.
       புனலூர்,சாவக்காடு, மஞ்சேரி, தாமரச்சேரி ஆகிய இடங்களில் அணிவகுப்பை நடத்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.2004 ஆம் ஆண்டு முதல் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நடத்திவருகிறது. மக்களிடம் சுதந்திரத்தின் உணர்வையும், தேசப்பற்றையும் சுடர்விட்டு ஒளிரச்செய்ய இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடுச் செய்வதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமைச் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி வெற்றியடைய அனைத்து பிரிவினர்களிடமும் பாப்புலர் ஃப்ரண்ட் தலைமைச்செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Sunday, July 24, 2011

வெடிகுண்டு நாடகம் நடத்திய அதிகாரியை பணி நீக்கம் செய்ய கோரி கோவையில் மாபெரும் ஆர்பாட்டம்

                 கடந்த 2006 ஜீலை 22 ஆம் தேதி கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி 5 அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து கோவை நகரத்தையே பெரும் பீதிக்குள்ளாகிய முன்னாள் உளவுதுறை அதிகாரி ரத்தின சபாபதியை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையக குழு உறுப்பினர் பதவிலிருந்து நீக்கக் கோரி 22-7-11 அன்று கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சுவரொட்கள் ஒட்டப்பட்டது. முஸலிம்கள் மீது தீவிரவாத பழி சுமத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிரு்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
SDPIயின் மாநில செயலாளர் சகோ. அபுபக்கர் சித்தீக் உரையாற்றுகிறார்

Saturday, July 23, 2011

நோன்பின் சிறப்பு

               'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!'' (என்று அல்லாஹ் கூறினான்) 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
                       ''சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

    அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!'' என்றார்கள்.

''ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 ''நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.. மற்றோர் அறிவிப்பில் 'ரமலான் பிறை'' என்று உள்ளது.

Thursday, July 21, 2011

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக சிறுபான்மை துறை அமைச்சருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆலோசனை

               முஸ்லிம் சமுதாயத்தின் நியாயமான பிரச்சனையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் சிறுபான்மை துறை அமைச்சர் சல்வாம் குர்ஷித் அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனைகள் முடிவுக்கு வந்துவிட்டது, அனைத்து அமைச்சரகம், அரசு நிறுவனத்தின் இறுதி ஆலோசனையை கேட்ட பின்பு உள்துறை அமைச்சகம் இறுதி அறிக்கையை சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது என அமைச்சர் சொன்னதை கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது.
               பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கம் மற்றும் ஆலோசனை இந்த நாட்டில் வாழ்ந்து வரும் எல்லா முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதை உள்ளடக்கியதாகும். அதே சமயத்தில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட். இ.எம் அப்துர் ரஹ்மான் அவர்களின் கடிதத்தின் சாராம்சம்,


1. எல்லா மாநிலங்களிளுள்ள அனைத்து முஸ்லிம்களையும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (SEBC) என்றோ அல்லது ஒட்டுமொத்தமாக இதர பிற்படுத்தப்பட்ட (OBC) வகுப்பினர் என்றோ அறிவிக்க வேண்டும்.


2. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையின்படி மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் இதர மத சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசு ஆணையைக் கொண்டு மத்திய அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


3. பணி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கையின் போது முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் வரக்கூடியவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர்களை விட முஸ்லிம்களாக வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.


4. அரசியல் சாசன பிரிவு 341, 1950 சட்ட திருத்தத்தின்படி தலித்துகளுக்கு இணையான தொழில்புரியும் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், பட்டியல் வகுப்பினரின் மொத்த இடஒதுக்கீட்டை விகிதாச்சாரத்திற்கேற்றாற் போல் மேம்படுத்த வேண்டும்.


5. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பட்டியலில் இருந்து பிரித்து முஸ்லிம்களுக்கு 10% தனி இட ஒதுக்கீடு தர வேண்டும். 27% உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டால் முஸ்லிம்களின் விகிதத்திற்கு ஏற்றாற் போல் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.


6. அதிகரிக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட (OBC Quota ) வில் முஸ்லிம்கள் சேர்க்கப்ட்டால் கேரளா, கர்நாடகத்தில் பின்பற்றப்படுவதைப் போல் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ரோஸ்டர் சுழற்சி அடிப்படையில் சேர்க்கையும், பணி நியமனமும் அமைய வேண்டும்.


7. இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் 50% உச்சவரம்பை தமிழகத்தில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டைப்போல் சட்ட திருத்தங்கள் (சட்டமன்ற நடவடிக்கைகள்) மூலம் சரிசெய்யலாம்.


ஏற்கனவே இருக்கக்கூடிய 49.5% இட ஒதுக்கீட்டில் (sc/st 22.5% and obc 27% ) புதிய 10% முஸ்லிம் இட ஒதுக்கீட்டை இணைக்க இது அவசியம்.


27% இருக்கும் ஓ.பி.சி பட்டியலை அதிகரிக்காமல் தற்போது ஓ.பி.சி பட்டியலில் இல்லாத முஸ்லிம்களை அந்த பட்டியலில் இணைக்க முயற்சி செய்தால் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்; இது முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு உகந்த சூழலை ஏற்படுத்தாது என்று பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவிலும் அவர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் முஸ்லிம் என்று புதிய பிரிவை இணைத்தாலும் இதே பிரச்சனைதான் ஏற்படும் எனபதையும் சுட்டிக்காட்டினார்.


எனவே இடஒதுக்கீட்டிற்கான அடுத்த கட்ட போராட்டத்தை, இப்பிரச்சினையில் ஆர்வமுள்ள பிற சமுதாய மற்றும் சமூக இயக்கங்களுடன் இணைந்து நடத்த வேண்டும் என சமீபத்தில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Wednesday, July 20, 2011

பயாஸ் உஸ்மானியின் மரணம்:சுதந்திர விசாரணை தேவை-பாப்புலர் ப்ரண்ட்

         புதுடெல்லி:மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸ் விசாரணையின் போது கொல்லப்பட்ட பயாஸ் உஸ்மானியின் மரணத்தில் சுதந்திர விசாரணை நடத்த வேண்டும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

உஸ்மானியின் மரணத்தில் கடுமையான மனித உரிமை மீறல் நடந்துள்ளது. பொது சமூகம் இதனை கடுமையாக கண்டிக்க வேண்டும். பயாஸ் உஸ்மானியின் மர்மமான முறையிலான மரணத்தை குறித்த கேள்விகளிலிருந்து தப்புவதற்கு குண்டு வெடிப்பிற்கு எதிரான மக்கள் உணர்ச்சியை போலீஸ் உபயோகிக்கிறது என பாப்புலர் ப்ரண்ட் குற்றம் சாட்டியுள்ளது. ஊடகங்களும், பொது சமூகமும் இச்சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொண்டது துரதிர்ஷ்டவசமானதாகும்.
                                     பயாஸ் உஸ்மானியின் மரணத்தை ஒரு பயங்கரவாதியின் மரணம் போல சித்தரிக்கப்பட்டது.  போலீஸாரின் வரம்புமீறிய சித்திரவதையின் காரணமாகவே பயாஸ் உஸ்மானி மரணமடைந்தார் என அவரதுகுடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டில் சித்திரவதையின் காரணமாக ஏராளமான மரணங்கள் நிகழ்ந்த பிறகும் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள அரசு தயங்குவது தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.இச்சம்பவத்திற்கு அரசு மிக முக்கியத்துவம் அளித்து இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.